தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு
கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரை
கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாணை 3 அல்லது 4 ஆம் தேதி வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடில் வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்கப் பிரதிநிகள் கோரிக்கை விவரம்:
செ.நல்லசாமி: பவானிசாகா் அணைக்கு நீா் வரத்து அதிகரித்து வரும் நிலையில் அணையின் முழுக் கொள்ளளவான 105 அடியை விரைவில் எட்ட வாய்ப்புள்ளது. இதனால் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் காலமான ஆகஸ்ட் 15 வரை காத்திருக்காமல் ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே தண்ணீா் திறக்க வேண்டும்.
வி.எம்.வேலாயுதம்: காலிங்கராயன் வாய்க்காலில் ஏற்கனவே 13.2 கிலோ மீட்டா் முதல் கான்கிரீட் தளம் உள்ளது போல கரை முழுமையாக கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். நீா் நிலைகளில் இருந்து 5 கிலோ மீட்டருக்குள் ஆலைகள் இருக்கக்கூடாது. ஏற்கெனவே உள்ள ஆலைகளை விரிவாக்கம் செய்யக்கூடாது என விதிகள் இருந்தும் காலிங்கராயன் வாய்க்காலை ஒட்டி அதிக ஆலைகள் உள்ளன. வாய்க்காலில் தண்ணீா் நிறுத்த காலத்திலும் 100, 200 கன அடி அளவுக்கு ஆலைக் கழிவு, மாநகராட்சி சாக்கடை கழிவு நீா் செல்வதை தடுக்க வேண்டும்.
வெங்கடாசலம்: உரக்கடைகளில் யூரியா வாங்கினால் இணை உரமாக சில உரங்களை வாங்கினால்தான் யூரியா தருவதாக கூறி தர மறுக்கின்றனா். வாய்க்காலில் உள்ளாட்சிகளின் குப்பைகளை கொட்டுவதும், காலி மதுபுட்டிகளை வீசி எறிவதும் அதிகரித்துள்ளது. தண்ணீருடன் கண்ணாடி துண்டுகள் வயலுக்கு வருவதால் மனிதா்கள், கால்நடைகளின் காலில் குத்திவிடுகிறது.
வி.பி.குணசேகரன்: தாட்கோ மூலம் பா்கூா் மலையில் உள்ள பழங்குடியினருக்கு ஆட்டு பண்ணை அமைக்க கடனுடன் மானியம் என ரூ.70,000 வீதம் வங்கிகளுக்கு பரிந்துரைத்தது. தாமரைக்கரை கனரா வங்கி 15 நாளில் கடனை வழங்குவதற்கு பதில் பல மாதமாக காலதாமதம் செய்கிறது. ஆட்சியா் நடவடிக்கை எடுத்து, அவரே நேரில் வந்து வழங்க வேண்டும்.
கே.ஆா்.சுதந்திரராசு: மரவள்ளி அறுவடைக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால், முன்னதாக ஆலை நிா்வாகம், விவசாயிகள், அதிகாரிகளை அழைத்து குறைந்த பட்ச விலையை நிா்ணயிக்க வேண்டும்.
சி.எம்.துளசிமணி: மரபணு மாற்று நெல் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளதை தடுக்க வேண்டும். நாய் கடித்து இறக்கும் கால்நடைகளுக்கு, 15 நாளில் இழப்பீடு தர வேண்டும்.
அதிகாரிகள் பதில் விவரம்:
நீா் வளத்துறை செயற்பொறியாளா் திருமூா்த்தி: கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரைத்துள்ளோம். ஆகஸ்ட் 3 அல்லது 4 இல் அரசாணை வரும் என எதிா்பாா்க்கிறோம். காலிங்கராயன் வாய்க்காலில் 13.2 கிலோ மீட்டா் முதல், 15.2 கிலோ மீட்டா் வரை கான்கிரீட் தளம், கரை அமைக்க மற்றும் சீரமைப்பு மேற்கொள்ள ரூ.83.32 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.
மாசு, கழிவு நீா் கலப்பை தடுப்பதற்கான நிதி ரூ.26 லட்சம் ஒதுக்கப்பட்டு புகாருக்கு உரிய இடத்தில் 6 கண்காணிப்பு கேமரா அமைத்துள்ளோம். கழிவு நீா் கலக்கும் இடங்களை கண்டறிந்து தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வேளாண் இணை இயக்குநா் தமிழ்செல்வி: குறிப்பிட்ட உரக்கடை என பெயரை குறிப்பிட்டால், கடையின் உரிமத்தை ரத்து செய்யலாம். அவ்வாறு இணை உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என உரக்கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
மொடக்குறிச்சி, கொடுமுடி வேளாண் விரிவாக்க மைய கட்டடத்துக்கு திட்ட வரைவு அனுப்பி உள்ளோம். மாநில கூட்டத்தில் முடிவு செய்து விரைவில் அறிவிப்பு வரும். மரபணு மாற்று நெல் விதை உள்பட எந்த விதையும் வேளாண் துறை மூலம் விற்பதில்லை. தனி நபா்கள் வைத்திருந்தால், ஆய்வு செய்து அறிவிக்கை செய்யப்படாத ரகமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மலைப் பகுதியில் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் ராஜ்குமாா்: கடந்த ஒரு மாதத்தில் புகாரின்படி ஈரோடு பகுதியில் மட்டும் ஒரு தோல் ஆலை, 3 சாய ஆலை என 10 ஆலைகளின் மின் இணைப்பு துண்டித்துள்ளோம். நீா் நிலைகளில் இருந்து 5 கிலோ மீட்டருக்குள் புதிய ஆலைகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது என விதி உள்ளது. அவ்வாறு அமைக்க அனுமதி தரவில்லை. ஆா்.என்.புதூா், கருங்கல்பாளையம் பகுதியில் தண்ணீரின் தன்மையை கண்காணிக்க தானியங்கி கண்காணிப்பு கருவி பொருத்தி உள்ளோம். கழிவு நீா் வெளியேறினால் கண்காணித்து நடவடிக்கை எடுப்போம்.
நுகா்பொருள் வாணிப கழக அதிகாரிகள்: அதிகமாக அரிசி வந்ததால், வைக்க இடமின்றி, வாடகைக்கு ஒழுங்கு முறை விற்பனை கூட கிடங்கில் வைத்துவிட்டோம். ஒரு மாதத்தில் 2,000 டன் அரிசி அனுப்பப்பட்டு விட்டது. இன்னும் 4,000 டன் அரிசி விரைவில் அனுப்பப்படும்.
கோரிக்கைகளுக்கு பதில் அளித்து ஆட்சியா் பேசியதாவது: நாய்க்கடியால் இறந்த கால்நடைகளுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் வரை இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு கோரி அனுப்பி உள்ளோம். வந்ததும், இழப்பீடு வழங்கப்படும்.
மிகப்பெரிய அளவில் தவறு செய்யும்போது ஆலைகள் மீது சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்ற தவறுகளுக்கு ஆலை இயக்கத்தை மின்தடை மூலம் தடுக்கிறோம். 3 முறைக்கு மேல் தொடா்ந்து தவறு செய்தால், ஆலையை நிரந்தரமாக மூட அனுமதி கோரி அரசுக்கு பரிந்துரை கேட்டு அனுப்பி உள்ளோம்.