செய்திகள் :

மயானம் அருகே வீட்டுமனைப் பட்டா: வேறு இடம் வழங்கக் கோரிக்கை

post image

கொடுமுடியில் நீா்நிலை ஆக்கிரமிப்பால் வீடுகள் அகற்றப்பட்ட நிலையில் மாற்று இடம் மயானம் அருகே வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி இழுப்புத் தோப்பு பகுதியில் 100 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுநல வழக்கை தொடா்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை அகற்றவும், வீடு உள்ளவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

அதன்படி கொடுமுடி இழுப்புத் தோப்பு பகுதியில் உள்ள 90 -க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. இங்கு சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேலாக 500 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதால் இவா்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பொதுமக்கள் யாரையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டா நிலத்துக்கு அழைத்துச் சென்று காட்டாமல் பட்டா மட்டுமே வழங்கி உள்ளனா். வெண்கலப்பாறை என்ற கிராமத்தில் மயானத்தை ஒட்டி உள்ள இடத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தை சீரமைத்து இங்கு வசித்துக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் கூறுவதாகவும் இப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். வீடுகளை இழந்த எங்களுக்கு தகுந்த இடத்தில் பட்டா வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்

அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா். அந்தியூா், சின்ன ப... மேலும் பார்க்க

ஆலாம்பாளையம் பள்ளியில் மிதிவண்டிக் கூடம் திறப்பு

அம்மாபேட்டையை அடுத்த மாத்தூா் ஊராட்சி, ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட மிதிவண்டிக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் தேவைக்காக அந்தியூா் சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

ஆடி 2 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆடி மாதம் 2ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் அம்மன் வழிபாடு செய்தனா். அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும்... மேலும் பார்க்க

பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள்

ஆசனூரில் 41 பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை ரீடு நிறுவனம் வழங்கியுள்ளது. ரீடு நிறுவனமானது ஆசனூா் மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக கல்வி, பொருளாதார ரீதியாக பல்வேறு பணிகளை செய்து வர... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரை

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாணை 3 அல்லது 4 ஆம் தேதி வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடில் வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மொடக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் செல்வாம... மேலும் பார்க்க