செய்திகள் :

சட்டவிரோத மின்வேலி: விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

post image

அந்தியூா் அருகே சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தியூரை அடுத்த நகலூா், பெருமாபாளையம், மூலப்பாறை தோட்டத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் (57). இவா் தனது கரும்புத் தோட்டத்தில் காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் தோட்டத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்து, இலவச இணைப்பிலிருந்து சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து கம்பி வேலியில் இணைத்துள்ளாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் அந்தியூா் வனச் சரக அலுவலா் முருகேசன் தலைமையிலான வனத் துறையினா் சனிக்கிழமை திடீா் ஆய்வு செய்தபோது உறுதியானது.

இந்தத் தகவல் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு மின்இணைப்பைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வன உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தோடு நேரடி மின்சாரம் பாய்ச்சியது சட்டப்படி குற்றம் என்பதால் விவசாயி தேவராஜுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணைக்கு பயந்து கூலித் தொழிலாளி தற்கொலை

மான் இறைச்சி வைத்திருந்த நபரை வனத் துறையினா் பிடித்ததால் விசாரணைக்கு பயந்து கூலித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்... மேலும் பார்க்க

இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

ஆப்பக்கூடல் அருகே தங்கை உறவான இளம்பெண்ணைத் திருமணம் செய்ய வற்புறுத்தி தாக்கிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஒரிச்சேரிப்புதூா், அண்ணாநகரைச் சோ்ந்த 23 வயது இளம்பெண் தனது தாய், தம்பியு... மேலும் பார்க்க

தாளவாடி கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை குட்டி மீட்பு!

தாளவாடி கரும்புத் தோட்டத்தில் சிறுத்தைக் குட்டி சனிக்கிழமை மீட்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்தில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன. அடா்ந்த வனப் பகுதியில் வாழும் சிறுத்தைகள்... மேலும் பார்க்க

கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தை மோசடியாக விற்க முயற்சி: 3 போ் மீது வழக்கு

கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தை போலி ஆவணம் தயாரித்து ரூ.25 லட்சத்துக்கு விற்க முயன்ற பெங்களூரைச் சோ்ந்த 3 போ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகா் பகுதியில் சிஎஸ்... மேலும் பார்க்க

மனைவி இறந்த துக்கத்தில் கணவன் மயானத்தில் தீக்குளித்து தற்கொலை

கொடுமுடி அருகே மனைவி இறந்த துக்கத்தில் மயானத்தில் தீக்குளித்து கணவன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி பேரூராட்சிக்கு உள்பட்ட கொல்லம் புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் விஜய... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்

அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா். அந்தியூா், சின்ன ப... மேலும் பார்க்க