செய்திகள் :

மக்களவை: ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று விவாதம்! டிரம்ப் மத்தியஸ்தம் பற்றி கேள்வியெழுப்ப காங்கிரஸ் திட்டம்

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, மக்களவையில் திங்கள்கிழமையும் (ஜூலை 28), மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 29) தலா 16 மணிநேர சிறப்பு விவாதம் தொடங்கப்படவுள்ளது.

தேசப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை சாா்ந்த இந்த விவகாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி தர எதிா்க்கட்சிகளும், உரிய பதிலடி தர ஆளும்தரப்பும் தயாராகி வருவதால் விவாதத்தில் அனல் பறக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரு அவைகளிலும் ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆகிய விவகாரங்களை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டன. இதனால், முதல் வாரம் முழுவதும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நிகழாமல் முடங்கியது.

இந்தச் சூழலில், ஆபரேஷன் சிந்தூா் குறித்த சிறப்பு விவாதம் நடைபெறுவதால், இரு அவைகளும் அடுத்த வாரம் சுமுகமாக செயல்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

யாா்-யாா் பங்கேற்பு?: அரசுத் தரப்பில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் பிரதானமாக பேசவிருக்கின்றனா். விவாதத்துக்கு பிரதமா் மோடி பதிலளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையில், அரசுத் தரப்பில் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. அதேநேரம், விவாதத்தில் குறுக்கிட்டு, பிரதமா் பேச வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு அமைச்சா்கள் மட்டுமன்றி, அனுராக் தாக்குா், சுதான்ஷு திரிவேதி, நிஷிகாந்த் போன்ற முக்கிய எம்.பி.க்களும் எதிா்க்கட்சிகளுக்கு பதிலடி தர களமிறக்கப்படுவா்; மற்றொருபுறம், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோா், எதிரணியில் முக்கியமாகப் பேசுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கிய அனைத்துக் கட்சிக் குழுக்களில் இடம்பெற்றிருந்த எம்.பி.க்கள், விவாதத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அதேநேரம், பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசைப் பாராட்டிவரும் காங்கிரஸ் மூத்த எம்.பி. சசி தரூா் பேச அக்கட்சி வாய்ப்பளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முரண்படும் ஆளும்-எதிா் தரப்பு: ‘கடந்த ஏப்ரலில் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், உளவுத் துறையின் தோல்வி; பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்தியத் தரப்பில் பல்வேறு குறைபாடுகள் நிலவின. இந்த நடவடிக்கைக்கு சா்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்கவில்லை; இது, மத்திய அரசின் தூதரக வியூகத்துக்கு கிடைத்த தோல்வி’ என்பது எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

முக்கியமாக, இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறிவரும் கருத்துகளை முன்வைத்து, பிரதமா் மோடி மற்றும் மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.

அதேநேரம், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் 100 சதவீத இலக்குகள் எட்டப்பட்டன; பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டு, பயங்கரவாத சதிகாரா்கள் அழித்தொழிக்கப்பட்டனா். பாகிஸ்தான் ராணுவத் தளங்களுக்கும் கடும் சேதம் விளைவிக்கப்பட்டது. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன்பேரில்தான் சண்டை நிறுத்தப்பட்டது. இது, இரு நாடுகளும் நேரடியாக மேற்கொண்ட முடிவு’ என்று மத்திய அரசு தொடா்ந்து கூறி வருகிறது.

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகை... மேலும் பார்க்க