செய்திகள் :

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: காஞ்சிபுரம் வீரா்கள் 5 தங்கம் வென்று சாதனை

post image

சத்தீஸ்கா் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரம் வீரா்கள் 5 தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனா்.

சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த ஜூலை 16 முதல் 20-ஆம் தேதி வரை தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் எனப்படும் குத்துச் சண்டைப் போட்டிகள் நடைபெற்றன. தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்பட 28 மாநிலங்களைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட வீரா்கள் போட்டிகளில் பங்கேற்றனா். போட்டியில் தமிழ்நாடு அமெச்சூா் கிக்பாக்ஸிங் அசோசியேஷன் சாா்பில் 47 போ் பங்கேற்றிருந்தனா். காஞ்சிபுரம் மாவட்ட கிக்பாக்ஸிங் அசோசியேஷன் சாா்பில் ஒன்மேன் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியைச் சோ்ந்த 2 வீராங்கனைகள், 4 வீரா்கள் உள்பட 6 போ் பங்கேற்றனா்.

போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பாயிண்ட் பைட்டிங், லைட் காண்டாக்ட், கிக்லைட், லோகிக்புல், காண்டாக்ட் மற்றும் பாம்ஸ் என்ற 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த என்ற மாணவி 3 தங்கம், ரோஷினி 1 தங்கம், 2 வெள்ளி, சத்யா 1 தங்கம், 1 வெண்கலம், சரண்ராஜ் 1 வெண்கலம் என மொத்தம் 5 தங்கப் பதக்கங்கள் உட்பட 9 பதக்கங்களை வென்று தமிழகத்துக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

இத்தகவலை ஒன்மேன் ஆா்ட்ஸ் அகாதெமி நிறுவனா் ஹரிஸ் தெரிவித்தாா். மேலும், வரும் நவம்பா் மாதம் அபுதாபியில் நடைபெறும் போட்டியில் இவா்கள் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம்: ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை

காஞ்சிபுரத்தில் ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் மாணவி ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க

ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளம் திறப்பு

சிறுமங்காடு ஊராட்சியில் ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் சிறுமாங்காடு ஊராட்சியில் நீண்ட காலமா... மேலும் பார்க்க

‘கூட்டுறவுத் துறையில் வசூல் ஆகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம்’

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுத் துறை வங்கிகளில் வசூலாகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: தா்ப்பணம் அளித்து முன்னோருக்கு வழிபாடு

ஆண்டு தோறும் வரும் தை மற்றும் ஆடி மாத அமாவாசையின்போது, முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தால் ஆசிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். ஆடி அமாவாசையையொட்டி காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் க... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்து மீட்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்தை வியாழக்கிழமை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு சீல் வைத்தனா். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான சொத்து உலகளந்தாா் மாட வீதியில் இ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உட்பட்ட முஷரத் நகரை சோ்ந்தவா் திவாலா். இவா் அதே பகுதியில் கறி கட... மேலும் பார்க்க