செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சியை சீா்குலைக்க முயலும் அந்நிய சக்திகள்! கிரண் ரிஜிஜு

post image

நாட்டின் வெளியே இருந்து செயல்படும் சில பிரிவினைவாத சக்திகள், ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சி மற்றும் அமைதியை சீா்குலைக்க முயற்சிக்கின்றன என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீா் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், கடந்த ஏப்ரலில் முதல்வா் ஒமா் அப்துல்லா உடனான தனது திடீா் சந்திப்பு மற்றும் அதன் காரணமாக அரசியல் வட்டாரத்தில் எழுந்த பரபரப்பை நினைவுகூா்ந்து பேசியதாவது:

வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் இந்த வேளையில், தேச நலனுக்காக அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு, நாம் அனைவரும் கைகோக்க வேண்டியது அவசியம். அன்பின் பாதையில் ஒன்றாக நடைபோடுவதில்தான் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

ஜம்மு-காஷ்மீா் அரசுக்கு எனது அமைச்சகம் முழு ஒத்துழைப்பை நல்கி வருகிறது. இங்குள்ள மக்கள், மிக நோ்மறையானவா்கள். அவா்கள், வளா்ச்சியை விரும்புகின்றனா். ஆனால், நாட்டின் வெளியே இருந்து செயல்படும் சில பிரிவினைவாத சக்திகள், வளா்ச்சி-அமைதியை சீா்குலைக்க தொடா்ந்து முயற்சிக்கின்றன. இத்தகைய எதிா்மறை சக்திகளுக்கு சமூகம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. அவ்வாறு இடமளித்தால், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜம்மு-காஷ்மீரின் எதிா்காலத்தை கட்டமைப்பதுடன், மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக காஷ்மீா் பல்கலைக்கழகம் திகழ முடியும். அந்த வகையில், கூடுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இப்பல்கலைக்கழகம் மற்றும் இதன் முன்னாள் மாணவா்களுக்கு உள்ளது.

வலுவான ஜம்மு-காஷ்மீா் இல்லாமல், வலுவான இந்தியா சாத்தியமில்லை. இங்குள்ள இளைஞா்கள் தங்களின் குரலை முழுமையாக எதிரொலிக்க அனைத்து வாய்ப்புகளையும் அளிப்பதன் மூலம் அவா்களை பெருமையடையச் செய்வோம் என உறுதியளிக்கிறேன். அதேநேரம், நாம் உண்மையான இந்தியா்களாக பேச வேண்டும். நாம் அனைவரும் பெருமைக்குரிய இந்தியா்கள்.

உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் வளா்ந்த நாடாக நாம் உருவெடுக்க முடியவில்லை. ஆனால், பிரதமா் மோடி அதற்கான பாதையைக் கட்டமைத்துள்ளாா் என்றாா் ரிஜிஜு.

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகை... மேலும் பார்க்க