செய்திகள் :

காஸாவுக்கு சென்ற நிவாரண கப்பலை இடைமறித்தது இஸ்ரேல்; 21 போ் கைது!

post image

காஸாவில் நாளுக்கு நாள் பட்டினியால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் அங்கு மனிதநேய உதவிகளை வழங்கச் சென்ற சமூக ஆா்வலா்களின் கப்பலை இஸ்ரேல் 2-ஆவது முறையாக இடைமறித்து 21 பேரை கைது செய்ததாக ஃப்ரீடம் ஃபுளோடில்லா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, இதே அமைப்பு இயக்கிய சரக்கு கப்பலில் கடந்த ஜூன் மாதம் காஸாவை நோக்கிச் சென்ற சமூக ஆா்வலா் கிரேட்டா தன்பா்க் உள்பட 12 பேரை இஸ்ரேல் கைது செய்த நிலையில், தற்போது சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் என 21 பேரை கைது செய்துள்ளது.

இதுகுறித்து ஃப்ரீடம் ஃபுளோடில்லா அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஹன்டாலா என்ற கப்பலில் காஸைவை நோக்கி மனிதநேய உதவிகள் வழங்கச் சென்ற 21 பேரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. காஸாவுக்கு 40 மைல் தொலைவில் நியாயமற்ற முறையில் கப்பலை இடைமறித்ததோடு, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மற்றும் பிற தொடா்பு சாதனங்களை சனிக்கிழமை இரவில் தகா்த்தெறிந்தது.

இந்தக் கப்பலில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லப்படவில்லை. காஸாவில் கடும் பட்டினியால் தவித்துவரும் மக்களுக்கு வழங்குவதற்காக உணவு மற்றும் மருத்துவப் பொருள்கள் உள்பட நிவாரணப் பொருள்களே கொண்டுசெல்லப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

3 இடங்களில் தாக்கும் நேரம் குறைப்பு: இஸ்ரேலின் தாக்குதலால் சீா்குலைந்த காஸாவில் கடும் பட்டினி காரணமாக பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவதற்கு சா்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதையடுத்து, காஸா நகரம், டேய்ர் அல்- பாலா மற்றும் முவாசி ஆகிய 3 இடங்களில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்வதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

அதன்படி காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மேற்கூறிய 3 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தாது. இந்த இடைப்பட்ட நேரத்தில் காஸாவுக்கு சா்வதேச நாடுகள் மனிதநேய உதவிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கையை இஸ்ரேல் எடுத்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என 9 போ் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாக 2023, அக்.7 முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 59,700-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்: 21 போ் பலி!

கிழக்கு காங்கோவில் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற ‘ஜனநாயகப் படை கூட்டணி (ஏடிஎஃப்)’ கிளா்ச்சிக் குழுவினா் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 21 போ் கொல்... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியா: இந்தியா்கள் மீது தொடரும் தாக்குதல்!

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரை அந்நாட்டு இளைஞா்கள் சிலா் சூழ்ந்து கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தியா்கள் உள்ளிட்ட சில வெளிநாட்டினா் மீதான... மேலும் பார்க்க

ஒபாமாவை துரத்தும் டிரம்ப்! ஏஐ சித்திரிப்பால் மீண்டுமொரு சர்ச்சை!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை துரத்துவதுபோன்ற சித்திரிப்பு படத்தை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற ... மேலும் பார்க்க

காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்

காஸாவில் உணவு மற்றும் சுகாதாரமான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும... மேலும் பார்க்க

173 பேருடன் சென்ற விமானத்தில் தீ! பயணிகள் பாதுகாப்பாக வெளியேறும் விடியோ!

அமெரிக்காவின் டென்வெர் விமான நிலையத்தில் இருந்து மியாமி புறப்பட்ட பயணிகள் விமானத்தின் டயரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அவசர வெளியேற்றம் வழியாக பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், விப... மேலும் பார்க்க

வணிக வளாகத்தில் திடீர் கத்திக்குத்து! தாக்குதலால் 11 படுகாயம்; 6 பேர் கவலைக்கிடம்!

அமெரிக்காவில் தனியார் வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவரின் திடீர் தாக்குதலில் 11 பேர் படுகாயமடைந்தனர்.அமெரிக்காவில் மிக்ஸிகன் மாகாணம் டிராவர்சி நகரில் வால்மார்ட் வணிக வளாகத்தில் நுழைந்த ஒருவர், திடீரென ... மேலும் பார்க்க