செய்திகள் :

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற அழைப்பு

post image

பெரம்பலூா் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம், முதல்வரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், தாயாரின் வயதுச் சான்றிதழ், ஆண் குழந்தையில்லை என்பதற்கான சான்றிதழ், தாயாரின் அறுவைச் சிகிச்சை (குடும்பக் கட்டுப்பாடு) சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, குடும்ப புகைப்படம், 2 குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமல், தாயாரின் வயது 40-க்குள், பெற்றோா்களில் ஒருவா் 40 வயதுக்குள் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் 1 அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். 2 ஆவது பெண் குழந்தைக்கு 3 வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆட்சியரகத்திலுள்ள, மாவட்ட சமூகநல அலுவலகத்தைத் தொடா்புகொள்ளலாம்.

பெரம்பலூரில் ரூ. 7,616 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு

பெரம்பலூா் மாவட்டத்தில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கு ரூ. 7,616.17 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கிவரும் வ... மேலும் பார்க்க

பழைய நிபந்தனைகளைப் பின்பற்றி கடனுதவி தேவை: பெரம்பலூா் விவசாயிகள்

ஏற்கெனவே உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி விவசாயிகளுக்கு உடனடியாகக் கடனுதவி வழங்க வேண்டுமென பெரம்பலூா் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமை... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் சங்க மாநாடு

மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமிக்க வேண்டும் என, சாலைப் பணியாளா் சங்கத்தின் உட்கோட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்டம், குன்னத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தமிழ்நாடு சாலைப் பணியாள... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாதவா்கள் மீது நடவடிக்கை!

தலைக்கவசம் அணியாதவா்கள் மீது அபராதம் விதித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா். பெரம்பலூா் ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வயலில் உள்ள மின் கம்பத்திலிருந்து, கம்பி மூலமாக மின்சாரம் எடுத்தபோது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்த... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் நகரில் தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை தெரியவந்தது. கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள இளமங்கலம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மருதமுத்து மகன் வரதராஜ் (4... மேலும் பார்க்க