செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தொழில் மானியம்: விண்ணப்பிக்க வரும் ஜூலை 31 - கடைசி நாள்

post image

சென்னை: புத்தொழில் தொடங்க விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மானிய உதவியை தமிழக அரசு வழங்கவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத்தின் சாா்பில் மாற்றுத்திறனாளிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் தொழில் தொடங்குவதற்கான மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதாவது, தொழில் தொடங்குவோருக்கு ரூ.5 லட்சம் வரை மானிய ஆதார உதவி அளிக்கப்படுகிறது. இவ்வாறு தொடங்கப்படும் தொழிலானது தனியராகவோ, கூட்டாகவோ இருக்க வேண்டும்.

இதுகுறித்து தமிழ்நாடு புத்தொழில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புத்தொழிலுக்கான விற்று முதலானது ரூ.50 கோடிக்குக் கீழ் இருக்க வேண்டும்.

கூட்டாகத் தொழில் தொடங்கினால் அதில் 51 சதவீதப் பங்குகள் மாற்றுத்திறனாளிகளுடையதாக இருப்பது அவசியம்.

தொழில் நிறுவனத்தின் அலுவலகமானது தமிழ்நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட வேண்டும். தொழில் தொடக்கத்துக்கான அனைத்து பிற ஆதார உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க

ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரைக் கண்டித்து அதிமுகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.ரூ.150 கோடி முறைகேடுமதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வண... மேலும் பார்க்க

கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மூன்று மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கு சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ், 2... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1,10,500 கன அடி!

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,10,500 கன அடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 1,10,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18... மேலும் பார்க்க