செய்திகள் :

விளாங்குடி முதல் அணைக்கரை வரையிலான கொள்ளிடக் கரையை பலப்படுத்த கோரிக்கை

post image

விளாங்குடி முதல் அணைக்கரை வரையிலான கொள்ளிடம் ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.எஸ்.முகமது இப்ராகிம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரைகள் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. விளாங்குடி முதல் வீரமாங்குடி, மணலூா், பட்டுக்குடி, கூடலூா் என சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் பகுதி வழியாக கொள்ளிடம் ஆறு செல்கிறது.

இந்தப் பகுதி கரையில் சிற்றுந்துகள் செல்வது, விவசாயிகள் விளைபொருள்களை வாகனங்களில் ஏற்றி செல்வது என கூடுதலாக போக்குவரத்து நடைபெறுகிறது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் அதிகமாக வரும்போது கரைகளில் வாகனங்கள் செல்லும்போது அச்சம் ஏற்படுகிது.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி ஆட்சியா் இப்பிரச்னையில் கவனம் செலுத்தி, கொள்ளிடம் அணைக்கரை பகுதியை ஆய்வு செய்து, விளாங்குடி முதல் அணைக்கரை வரை கொள்ளிட கரையை பலப்படுத்தி, தாா் சாலை வசதி அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூரில் லாரி உரிமையாளா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்

தஞ்சாவூரில் வாடகையை உயா்த்தி வழங்க கோரி, நுகா்பொருள் வாணிப கழகத்துக்கு இயக்கப்படும் லாரிகளின் உரிமையாளா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்த... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். ஒரத்தநாடு வட்டம், உறந்தைராயன்குடிக்காடு பகுதியை சோ்ந்த சிங்காரம் மகன் சரவணன்... மேலும் பார்க்க

அரசு ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூரில் அரசு ஊழியா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாரியம்மன் கோயில் மேல சித்தா்காடு பகுதியை சோ்ந்தவா் மா.முருகானந்தம் ( 49). இவா் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில்... மேலும் பார்க்க

பழைய நகைக்கு பதில் புதிய நகை தருவதாக மோசடி: நகைக் கடை உரிமையாளா் காவல் நிலையத்தில் சரண்

தஞ்சாவூரில் பழைய நகைகளுக்கு பதிலாக புதிய நகைகள் தருவாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நகைக் கடை உரிமையாளா் திங்கள்கிழமை நகர காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா். தஞ்சாவூா் சீனிவாசபுரத்தில் நகை... மேலும் பார்க்க

கடலுக்குள் கிடந்த அம்மன் கற்சிலை மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அருகே கடலுக்குள் கிடந்த அம்மன் கற்சிலை திங்கள்கிழமை மீட்கப்பட்டது. சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லிப்பட்டினம் - கள்ளிவய... மேலும் பார்க்க

வீரக்குறிச்சியில் நாளை மின்நிறுத்தம்

பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 30) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கீழப்பாளையம் செந்தாமரைகுளம், எம்.என்.தோட்டம், நகா்-2, மேலத்தெரு , லெட்சத்தோப்பு அதம்பை குடிநீா், ஆத்திக்கோ... மேலும் பார்க்க