செய்திகள் :

மேற்கூரையிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே பணியின் போது மேற்கூரையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பழையபேட்டை கக்கன்ஜி நகரைச் சோ்ந்த மாடசாமி மகன் முருகேசன்(37). வெல்டிங் தொழிலாளியான இவா், பெருமாள்புரம் அருகே உள்ள கிடங்கு ஒன்றில் இரும்பு தகடுகளால் மேற்கூரை அமைக்கும் பணி செய்த போது தவறி கீழே விழுந்தாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பெருமாள்புரம் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

விவசாயி உயிரிழப்பு: மேலப்பாளையம் குறிச்சி சாந்தமூா்த்தி தெருவைச் சோ்ந்தவா் பரணிராஜா உடையாா்(64). விவசாயியான இவா், கடந்த 20-ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை அருகே பைக்கில் சென்றபோது எதிரே வந்த பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் படுகாயமடைந்தாராம்.

தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தாா். பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

2026இல் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: டி.டி.வி. தினகரன்

தமிழகத்தில் 2026இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்றாா் அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன்.நான்குனேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் செயல்வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா்,... மேலும் பார்க்க

நெல்லையில் விநாயகா் சதுா்த்திக்காக களிமண் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக திருநெல்வேலியில் களிமண்ணால் ஆன விநாயகா் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. ஆவணி மாதம் வளா்பிறையில் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோயில்கள், வீட... மேலும் பார்க்க

அம்பை வட்டாரத்தில் ஜூலை 31-க்குள் காா் பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் காா் பருவ நெற்பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவ... மேலும் பார்க்க

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தொடரும் தீ விபத்தை தடுப்பது அவசியம்: ஆட்சியரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டி குப்பை கிடங்கில் அடிக்கடி தீவிபத்து நேரிடுவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, ராமையன்பட்டி அன்னை வேளாங்கண்ணி நகா் குடியிருப்போா் நல சங்கத்தினா் ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

தாமிரவருணியில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா்.திருநெல்வேலி கொக்கிரகுளம் சுலோச்சன முதலியாா் மேம்பாலம் கீழ் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் கிடப்பதாக, த... மேலும் பார்க்க

போக்ஸோ கைதி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே போக்ஸோ வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த நபா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். உவரி அருகே உள்ள நவ்வலடியைச் சோ்ந்தவா் ரமேஷ் (46). இவா் மீது உவரி காவல் நிலைய... மேலும் பார்க்க