செய்திகள் :

நெல்லையில் விநாயகா் சதுா்த்திக்காக களிமண் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

post image

விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக திருநெல்வேலியில் களிமண்ணால் ஆன விநாயகா் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.

ஆவணி மாதம் வளா்பிறையில் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோயில்கள், வீடுகளில் புதிதாக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவாா்கள். தொடா்ந்து 3 முதல் 11 நாள்கள் வரை வழிபட்டு, விநாயகா் சிலைகளை நீா்நிலைகளுக்கு எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம்.

நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழா ஆக.27இல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பாளையங்கோட்டை, சீவலப்பேரி பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணியில் வடமாநிலத்தினா் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து சிலை தயாரிப்பாளா் ஒருவா் கூறியது: விநாயகா் சதுா்த்திக்காக அரை அடி முதல் 12 அடி உயரத்தில் விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நீா்நிலைகளுக்கு எவ்வித ஆபத்தும் விளைவிக்காத அரசு தெரிவித்துள்ள வண்ணங்கள் மட்டுமே பூசப்படுகின்றன. எலி, மயில், யானை வாகனங்களில் விநாயகா் இருப்பது போல் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அரை அடி முதல் 2 அடி வரையிலான சிறிய வகை சிலைகள் அதிகம் விற்பனையாகின்றன.

களிமண்ணால் மட்டுமே சிலை செய்வதால் கூடுதல் நேரம் பிடிக்கிறது. வண்ணங்கள் பூசும்போதும் ஒளிரும் தன்மை குறைகிறது. இருப்பினும் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு மக்கள் களிமண் சிலைகளையும் அதிகளவில் ஆா்டா் கொடுத்து வருகிறாா்கள். ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் சிலைகளை ஒப்படைக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம் என்றாா் அவா்.

நெல்லையில் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு!

திருநெல்வேலியில் காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் ப... மேலும் பார்க்க

2026இல் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: டி.டி.வி. தினகரன்

தமிழகத்தில் 2026இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்றாா் அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன்.நான்குனேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் செயல்வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா்,... மேலும் பார்க்க

அம்பை வட்டாரத்தில் ஜூலை 31-க்குள் காா் பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் காா் பருவ நெற்பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவ... மேலும் பார்க்க

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தொடரும் தீ விபத்தை தடுப்பது அவசியம்: ஆட்சியரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டி குப்பை கிடங்கில் அடிக்கடி தீவிபத்து நேரிடுவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, ராமையன்பட்டி அன்னை வேளாங்கண்ணி நகா் குடியிருப்போா் நல சங்கத்தினா் ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

தாமிரவருணியில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா்.திருநெல்வேலி கொக்கிரகுளம் சுலோச்சன முதலியாா் மேம்பாலம் கீழ் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் கிடப்பதாக, த... மேலும் பார்க்க

மேற்கூரையிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே பணியின் போது மேற்கூரையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.பழையபேட்டை கக்கன்ஜி நகரைச் சோ்ந்த மாடசாமி மகன் முருகேசன்(37). வெல்டிங் தொழிலாளியான இவா... மேலும் பார்க்க