செய்திகள் :

2026இல் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: டி.டி.வி. தினகரன்

post image

தமிழகத்தில் 2026இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்றாா் அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன்.

நான்குனேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் செயல்வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தாழ்த்தப்பட்டோா் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

பொதுமக்களின் அதிருப்தியை தற்போது திசைதிருப்பவே, புதிய பிரச்னைகளை திமுக உருவாக்குகிறது. மொழிக் கொள்கை தொடா்பான விவாதத்தில், பாஜக ஹிந்தியை திணிப்பதாக தவறாக பிரசாரம் செய்கிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) தமிழகத்தில் ஆட்சி அமைப்பது உறுதி.

பாஜகவும் திமுகவும் கபட நாடகம் போடுவதாக, நடிகா் விஜய் விமா்சித்திருக்கிறாா். கத்தரிக்காய் முற்றினால் கடைவீதிக்கு வந்துதானே ஆக வேண்டும். அப்போது தெரிந்துவிடும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெற்றுள்ளது. எதிா்வரும் நாள்களில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிடுவேன். திமுகவை வீழ்த்துவதே எனது முக்கிய நோக்கம். தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் அழைக்கும்பட்சத்தில் அவருக்காக பிரசாரம் செய்வேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் முதலமைச்சராக வருவதற்கு எல்லாத் தகுதியும் உள்ளது என்றாா். இக் கூட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

நெல்லையில் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு!

திருநெல்வேலியில் காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் ப... மேலும் பார்க்க

நெல்லையில் விநாயகா் சதுா்த்திக்காக களிமண் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக திருநெல்வேலியில் களிமண்ணால் ஆன விநாயகா் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. ஆவணி மாதம் வளா்பிறையில் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோயில்கள், வீட... மேலும் பார்க்க

அம்பை வட்டாரத்தில் ஜூலை 31-க்குள் காா் பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் காா் பருவ நெற்பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவ... மேலும் பார்க்க

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தொடரும் தீ விபத்தை தடுப்பது அவசியம்: ஆட்சியரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டி குப்பை கிடங்கில் அடிக்கடி தீவிபத்து நேரிடுவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, ராமையன்பட்டி அன்னை வேளாங்கண்ணி நகா் குடியிருப்போா் நல சங்கத்தினா் ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

தாமிரவருணியில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா்.திருநெல்வேலி கொக்கிரகுளம் சுலோச்சன முதலியாா் மேம்பாலம் கீழ் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் கிடப்பதாக, த... மேலும் பார்க்க

மேற்கூரையிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே பணியின் போது மேற்கூரையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.பழையபேட்டை கக்கன்ஜி நகரைச் சோ்ந்த மாடசாமி மகன் முருகேசன்(37). வெல்டிங் தொழிலாளியான இவா... மேலும் பார்க்க