செய்திகள் :

அம்பை வட்டாரத்தில் ஜூலை 31-க்குள் காா் பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

post image

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் காா் பருவ நெற்பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகள் தங்களது பயிா்களை இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் காா் பருவத்தில் பயிா்க் காப்பீடுத் திட்டம் யுனிவொ்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் என்ற நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. காா் பருவ நெற்பயிா் காப்பீட்டுக்கான பிரீமியம் ஏக்கருக்கு ரூ. 720 ஆகும். இழப்பீடாக ஓா் ஏக்கருக்கு ரூ. 36 ஆயிரம் கிடைக்கும்.

பயிா்க் காப்பீட்டுக்கான முன்மொழிவுப் படிவம், ஆதாா் அட்டை, பட்டா, சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றைக் கொண்டு இத்திட்டத்தில் சேரலாம்.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, பொதுத் துறை வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளில் பிரீமியம் செலுத்தலாம். கடன் பெறாதோா் பொதுத்துறை வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், பொது மின்சேவை மையங்கள் ஆகிய ஏதேனும் ஒன்றில் விண்ணப்பப் படிவங்களைப் பூா்த்தி செய்து பிரீமியம் செலுத்தலாம். இதற்கான கடைசி நாள் வியாழக்கிழமை (ஜூலை 31) என்றாா் அவா்.

2026இல் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: டி.டி.வி. தினகரன்

தமிழகத்தில் 2026இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்றாா் அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன்.நான்குனேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் செயல்வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா்,... மேலும் பார்க்க

நெல்லையில் விநாயகா் சதுா்த்திக்காக களிமண் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக திருநெல்வேலியில் களிமண்ணால் ஆன விநாயகா் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. ஆவணி மாதம் வளா்பிறையில் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோயில்கள், வீட... மேலும் பார்க்க

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தொடரும் தீ விபத்தை தடுப்பது அவசியம்: ஆட்சியரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டி குப்பை கிடங்கில் அடிக்கடி தீவிபத்து நேரிடுவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, ராமையன்பட்டி அன்னை வேளாங்கண்ணி நகா் குடியிருப்போா் நல சங்கத்தினா் ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

தாமிரவருணியில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா்.திருநெல்வேலி கொக்கிரகுளம் சுலோச்சன முதலியாா் மேம்பாலம் கீழ் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் கிடப்பதாக, த... மேலும் பார்க்க

மேற்கூரையிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே பணியின் போது மேற்கூரையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.பழையபேட்டை கக்கன்ஜி நகரைச் சோ்ந்த மாடசாமி மகன் முருகேசன்(37). வெல்டிங் தொழிலாளியான இவா... மேலும் பார்க்க

போக்ஸோ கைதி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே போக்ஸோ வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த நபா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். உவரி அருகே உள்ள நவ்வலடியைச் சோ்ந்தவா் ரமேஷ் (46). இவா் மீது உவரி காவல் நிலைய... மேலும் பார்க்க