செய்திகள் :

``முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி அளித்ததால், நீதித்துறை மீது திமுக அரசுக்கு கோபம்'' - H.ராஜா

post image

"இந்துக்களுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து, அவர் நீண்ட ஆயுளோடு இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்" என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியுள்ளார்.

பிரதமர் மோடி

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசை கண்டிப்பதாக் கூறி மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.

இதில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா பேசும்போது, "திமுக அரசு இந்து மக்களுக்கும், இந்து மடாதிபதிகளுக்கும் எதிராக செயல்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்காத காரணத்தினால் மதுரை ஆதீனத்திற்கு தொடர்ந்து இந்த அரசு மிரட்டல் விடுத்து வருவது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

இந்து விரோத திமுக-வில் இந்துக்கள் இருக்கக்கூடாது. பிரதமர் மோடி தமிழகம் வந்ததால் முதலமைச்சருக்கு காய்ச்சல் வந்து விட்டது. அவர் டெல்லி சென்றவுடன், காய்ச்சல் குறைந்து விட்டது. திமுக அரசு, மோடியை பார்த்து பயந்துள்ளது.

மதுரையில் ஒழுக்கமாக முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி இருக்கிறோம். ஆனால், திமுக-வினரால் அதுபோன்று ஒரு மாநாட்டை நடத்த முடியாது. இந்து சமுதாயத்தை எப்படியொல்லாம் கொடுமைப்படுத்தலாம் என திமுக நினைத்து கொண்டிருக்கிறது. அதற்காக காவல்துறையை கையில் எடுத்துள்ளனர்.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற கோயில் ஊழியரை காவல்துறை அடித்துக் கொலை செய்துள்ளது. இன்னொரு பக்கம் நேர்மையாக பணியாற்றியடி. எஸ்.பி-யை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுபோன்று நேர்மையாக இருப்பவர்களுக்கும், இந்துக்களுக்கும் எதிராக திமுக செயல்பட்டு வருகிறது. எனவே, ஒரு இந்து கூட திமுகவிற்கு வாக்களிக்கக்கூடாது, அவர்களை தேர்தல் மூலம் தூக்கி எறிய வேண்டும்.

பாதிரியார் மோகன் லாசரஸ் இந்து கோயில்கள் சாத்தான்களின் கூடாரம் என விமர்சித்தார். அவர் மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்ததா?

டாஸ்மாக் ஊழல் விவகாரம் அமலாக்கத்துறை பிடியில் உள்ளதால் அதிர்ந்து போய் என்ன செய்வது என தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் நடுக்கத்தில் உள்ளார். அதை மறைப்பதற்காகவே இந்துக்கள் மீதும் இந்து மடாதிபதிகள் மீதும் தாக்குதலை நடத்தத் தொடங்கி உள்ளார்.

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இந்த அரசு அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பிறகும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதையும் தாண்டி முருக பக்தர்கள் மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. இதை திமுக அரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி அளித்த நீதித்துறை மீது கோபத்தில் உள்ளது, அரசின் இச்செயல் அவர்களுக்கு எதிராகவே திரும்பும்.

ஹெச்.ராஜா

2023 ஜனவரியில் ராமஜென்ம பூமி பிரதிஷ்டை நடந்தபோது தமிழகத்தில் எந்த கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தக்கூடாது, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கக்கூடாது என இந்த அரசு உத்தரவிட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் உடல் நலம் குறித்து கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்துக்களுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்தே தவிர, அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என முதலில் கேட்டது பாஜகதான், இந்த வழக்கில் திமுகவை சேர்ந்த பலர் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

Kerala: கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: கொந்தளிக்கும் கட்சிகள்.. கேரள பாஜக தலைவர் சொல்வது என்ன?

கேரள மாநிலம் அங்கமாலி இடவூர் சபை உறுப்பினரான கன்னியாஸ்திரி பிரீதிமேரி, கண்ணூர் தலசேரி உதயகிரி சபை உறுப்பினரான வந்தனா பிரான்ஸிஸ் ஆகியோர் சத்திஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்கடத்தல் மற்று... மேலும் பார்க்க

`நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து' - இந்தியாவின் கிராண்ட் முஃப்தி; நிமிஷா வழக்கின் டைம்லைன்!

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் 'கிராண்ட் முஃப்தி' என அழைக்கப்படும் காந்தபுரம் ஏபி அபூபக்கர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. யார் இந... மேலும் பார்க்க

``சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் கைது; வகுப்புவாத ஆபத்து..'' -மு.க.ஸ்டாலின் கண்டனம்

மனித கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கேரளாவை சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் உள்ள துர்க் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதனால், நேற்று, கேரளா முழுவ... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்த தாய்லாந்து - கம்போடியா போர்; மலேசியா பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு..

எல்லைப் பிரச்னை காரணமாக, கம்போடியா - தாய்லாந்து போர் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. 5 நாள்கள் நடந்த இந்தப் போரில், கிட்டத்தட்ட 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.பிற நாடுகளின... மேலும் பார்க்க

``வீணாக கடலில் கலக்கும் முல்லைப் பெரியாறு நீர்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?'' - ஆர்.பி உதயகுமார்

"முல்லைப் பெரியாறு அணையின் நீர் வீணாக கேரளக் கடலில் கலக்கிறது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க