செய்திகள் :

சென்னை: நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வடமாநில இளைஞர் கைது

post image

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 30 வயதாகும் இளம்பெண் ஒருவர் கடந்த 26.07.2025-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை நேரத்தில் (27.07.2025), அவரின் அருகில் ஆண் ஒருவர் அமர்ந்திருந்து அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தார். அதனால் கண்விழித்த இளம்பெண், அதிர்ச்சியடைந்ததோடு சத்தம் போட்டார். உடனே அந்த நபர், இளம்பெண்ணை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நடந்த சம்பவத்தை இளம்பெண், தன்னுடைய குடும்பத்தினரிடம் கூறினார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அதோடு இளம்பெண், தெரிவித்த தகவலின்படி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தனர்.

தீபக்குமார்

அப்போது இளம்பெண்ணுக்கு நள்ளிரவில் பாலியல் தொல்லைக் கொடுத்தது பீகார் மாநிலம், ஜனாக்கூர் பகுதியைச் சேர்ந்த தீபக்குமார் (37) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரைப்பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் தீபக்குமார், அந்தப்பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருவது தெரியவந்தது. மேலும் அவர் இளம்பெண் குடியிருக்கும் பகுதியில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. சம்பவத்தன்று இளம்பெண் கவீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, பால்கனி வழியாக வீட்டுக்குள் நுழைந்த தீபக்குமார், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். இதையடுத்து தீபக்குமாரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவாரூர்: பேச மறுத்த காதலி வீட்டில் நண்பர்களுடன் ரகளை செய்த காதலன்- சண்டையை விலக்க சென்றவர் கொலை!

திருவாரூர் மாவட்டம், பாண்டுகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஆதம் வயது 23. இவர் தென்காசி, பறையபட்டி பகுதியில் வசித்து வருகிறார். திருவாரூர் புலிவலம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண் வயது 22. இருவரும... மேலும் பார்க்க

குமரி: போலீஸ் தாக்கியதில் 80 வயது மூதாட்டி மரணமா?- உறவினர்கள் குற்றச்சாட்டும், காவல்துறை விளக்கமும்!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் சூசைமரியாள்(80). இவரது பேரனை ஒரு வழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு நான்கு காவலர்கள் இன்று ஆதிகாலையில் வீட்டிற்க... மேலும் பார்க்க

போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை.. சென்னையில் 3 பேர்கைது; பின்னணி என்ன?

சென்னையில் போதைக்காக சிலர் உடல் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. அதனால், பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருக... மேலும் பார்க்க

``நீ எப்படி மோடியை விமர்சிக்கலாம்..." - சு.வெங்கடேசனுக்கு வந்த கொலை மிரட்டல் - வலுக்கும் கண்டனம்!

நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் ஆளும் அரசையும், பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும் கடுமையான கேள்விகளை முன்வைத்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சு.வெங்கடேசனுக்கு கொலை ம... மேலும் பார்க்க

நெல்லை: அரிவாளுடன் ஊரை பதற வைத்த சிறுவர்கள்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு! நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம் பாப்பாகுடி அருகே உள்ள இடைக்கால் பகுதியைச் சேர்ந்த இரு இளஞ்சிறார், நேற்று இரவு ஊருக்கு ஒதுக்கு புறமான குளக்கரை பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மாற்று சம... மேலும் பார்க்க

Digital arrest scam: 3 மாதத்தில் ரூ.19 கோடி இழந்த டாக்டர்.. வங்கி கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி

பணமோசடி, போதைப்பொருள் வழக்குகளில் சிக்கி இருப்பதாக கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுவதாக மிரட்டி, முதியவர்கள், பெண்களிடம் சைபர் கிரிமினல்கள் பணம் பறித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு வி... மேலும் பார்க்க