செய்திகள் :

போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை.. சென்னையில் 3 பேர்கைது; பின்னணி என்ன?

post image

சென்னையில் போதைக்காக சிலர் உடல் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. அதனால், பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக 12 காவல் மாவட்டங்களில் போலீஸ் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

விக்னேஷ்

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியான T.H. ரோடு மற்றும் தொப்பை விநாயகர் கோயில் சந்திப்பு பகுதியில் போதைக்காக உடல் வலி நிவாரண மாத்திரைகள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த 3 பேரிடம் போலீஸார் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்தபோது, அதில் உடல்வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. அதுகுறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், "எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி வாகனச் சோதனையில் ஈடுபட்டோம். அப்போது அவ்வழியாக வந்த பெண் உள்பட மூன்று பேரிடம் விசாரித்தோம். அவர்கள் உடல் வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் வைத்திருந்தனர். அதுகுறித்து விசாரித்தபோது போதைக்காக சிலர் உடல் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துவதும் அதற்காக சட்டவிரோதமாக இந்த மாத்திரைகளை விற்பதும் தெரியவந்தது.

உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்ற மேனகா

இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தோம். விசாரணையில் அவர்கள் கொடுங்கையூரைச் சேர்ந்த விக்னேஷ் (25), அவரின் அம்மா மேனகா (40), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷின் கூட்டாளி தினகரன் (23) எனத் தெரியவந்தது.

இவர்களிடமிருந்து 490 மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸார் மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர். இதில் விக்னேஷ், மும்பையிலிருந்து உடல்வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி வந்து, சென்னையில் அவரது தாய் மற்றும் கூட்டாளி தினகரனுடன் சேர்ந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்திருக்கிறார்.

கைதான விக்னேஷ் மீது 3 குற்ற வழக்குகளும், மேனகா மற்றும் தினகரன் மீது தலா ஒரு குற்ற வழக்கும் உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

போதை மாத்திரை விற்ற வழக்கில் தாய், மகன் கைதான சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவாரூர்: பேச மறுத்த காதலி வீட்டில் நண்பர்களுடன் ரகளை செய்த காதலன்- சண்டையை விலக்க சென்றவர் கொலை!

திருவாரூர் மாவட்டம், பாண்டுகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஆதம் வயது 23. இவர் தென்காசி, பறையபட்டி பகுதியில் வசித்து வருகிறார். திருவாரூர் புலிவலம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண் வயது 22. இருவரும... மேலும் பார்க்க

குமரி: போலீஸ் தாக்கியதில் 80 வயது மூதாட்டி மரணமா?- உறவினர்கள் குற்றச்சாட்டும், காவல்துறை விளக்கமும்!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் சூசைமரியாள்(80). இவரது பேரனை ஒரு வழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு நான்கு காவலர்கள் இன்று ஆதிகாலையில் வீட்டிற்க... மேலும் பார்க்க

``நீ எப்படி மோடியை விமர்சிக்கலாம்..." - சு.வெங்கடேசனுக்கு வந்த கொலை மிரட்டல் - வலுக்கும் கண்டனம்!

நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் ஆளும் அரசையும், பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும் கடுமையான கேள்விகளை முன்வைத்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சு.வெங்கடேசனுக்கு கொலை ம... மேலும் பார்க்க

நெல்லை: அரிவாளுடன் ஊரை பதற வைத்த சிறுவர்கள்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு! நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம் பாப்பாகுடி அருகே உள்ள இடைக்கால் பகுதியைச் சேர்ந்த இரு இளஞ்சிறார், நேற்று இரவு ஊருக்கு ஒதுக்கு புறமான குளக்கரை பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மாற்று சம... மேலும் பார்க்க

சென்னை: நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வடமாநில இளைஞர் கைது

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 30 வயதாகும் இளம்பெண் ஒருவர் கடந்த 26.07.2025-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை நேரத்தில் (27.07.2025), அவரின் அருகில் ஆ... மேலும் பார்க்க

Digital arrest scam: 3 மாதத்தில் ரூ.19 கோடி இழந்த டாக்டர்.. வங்கி கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி

பணமோசடி, போதைப்பொருள் வழக்குகளில் சிக்கி இருப்பதாக கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுவதாக மிரட்டி, முதியவர்கள், பெண்களிடம் சைபர் கிரிமினல்கள் பணம் பறித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு வி... மேலும் பார்க்க