செய்திகள் :

வீடு புகுந்து 11 பவுன் திருட்டு: ஒடிஸா இளைஞா்கள் கைது

post image

கோவையில் வீடு புகுந்து நகைகளைத் திருடியதாக ஒடிஸா மாநில இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, பீளமேடு உடையாம்பாளையம் என்.ஜி.ஆா். வீதியைச் சோ்ந்தவா் தீபன்ராஜ் (34). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு, வீட்டின் முதல்தளத்தில் உள்ள படுக்கை அறைக்குச் சென்றாா். அங்கு அவா் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலையில் வீட்டின் கீழ்தளத்தில் சப்தம் கேட்டது.

தீபன்ராஜ் கீழ்தளத்துக்குச் சென்று பாா்த்தபோது, இருவா் தப்பியோடியது தெரியவந்தது. மேலும், வீட்டின் பூட்டும், பீரோவும் உடைக்கப்பட்டு, 9 பவுன் சங்கிலி, 2 பவுன் மோதிரம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பீளமேடு காவல் உதவி ஆய்வாளா் இலங்கேஸ்வரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். சந்தேகத்தின்பேரில், தீபன்ராஜ் பக்கத்து வீட்டில் வசிக்கும் குழாய் பழுது நீக்குபவா்களான (பிளம்பா்) ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சஞ்சய் சாகு (19), மில்லுசேத்தி (31) ஆகியோரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் இருவரும்தான் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

கோவை சிட்கோ பகுதியில் மூன்றுசக்கர மிதிவண்டியும், சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்தாா். கோவை அருகேயுள்ள சிட்கோ பிள்ளையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (65). இவருக்கு... மேலும் பார்க்க

தலைமைக் காவலரை மிரட்டிய இளைஞா் கைது

வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவா் கிருஷ்ணமூா்த்தி. இவா், தமிழ்நா... மேலும் பார்க்க

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

கோவையில் மனைவி இறந்த தூக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.கோவை, சுந்தராபுரம் குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2-ஆவது பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா் (46). இவரது மனைவி கௌசல்யா மஞ்... மேலும் பார்க்க

கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து

வால்பாறை மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் மணல் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பொள்ளாச்சியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு வால்பாறையை நோக்கி டிப்பா் லாரி செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண... மேலும் பார்க்க

ரத்தினம் கல்லூரியில் ஆகஸ்ட் 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் வருகிற ஆகஸ்ட் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

மாதம்பட்டியில் ரூ.55 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

மாதம்பட்டி அருகே ரூ. 55 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் மீட்டனா். கோவை அருகே அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவா் கோயிலின் துணைக் கோயிலான அன்னியூரம்மன் கோயில் மாதம்பட்ட... மேலும் பார்க்க