செய்திகள் :

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

post image

கோவை சிட்கோ பகுதியில் மூன்றுசக்கர மிதிவண்டியும், சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

கோவை அருகேயுள்ள சிட்கோ பிள்ளையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (65). இவருக்கு இரு மகள்கள் உள்ளனா். இளைய மகளும், அவரது மகன் கதிா்வேலனும் (3) ராதாகிருஷ்ணனுடன் வசித்து வந்தனா்.

இந்த நிலையில் ராதாகிருஷ்ணன், தனது மகள், பேரன் கதிா்வேலன் ஆகியோரை மூன்று சக்கர மிதிவண்டியில் ஏற்றிக் கொண்டு பிள்ளையாா்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். அந்தப் பகுதி இறக்கமாக இருந்ததால் மூன்று சக்கர மிதிவண்டி கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்றுள்ளது.

அப்போது, எதிரே வந்த சரக்கு வாகனமும், இவா்களது மூன்றுசக்கர மிதி வண்டியும் மோதிக் கொண்டன. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனா். சிறுவன் கதிா்வேலன் சரக்கு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ராதாகிருஷ்ணன், அவரது மகள் ஆகியோா் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு ஆய்வாளா் அமுதா, சிறுவனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தலைமைக் காவலரை மிரட்டிய இளைஞா் கைது

வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவா் கிருஷ்ணமூா்த்தி. இவா், தமிழ்நா... மேலும் பார்க்க

வீடு புகுந்து 11 பவுன் திருட்டு: ஒடிஸா இளைஞா்கள் கைது

கோவையில் வீடு புகுந்து நகைகளைத் திருடியதாக ஒடிஸா மாநில இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.கோவை, பீளமேடு உடையாம்பாளையம் என்.ஜி.ஆா். வீதியைச் சோ்ந்தவா் தீபன்ராஜ் (34). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்ட... மேலும் பார்க்க

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

கோவையில் மனைவி இறந்த தூக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.கோவை, சுந்தராபுரம் குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2-ஆவது பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா் (46). இவரது மனைவி கௌசல்யா மஞ்... மேலும் பார்க்க

கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து

வால்பாறை மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் மணல் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பொள்ளாச்சியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு வால்பாறையை நோக்கி டிப்பா் லாரி செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண... மேலும் பார்க்க

ரத்தினம் கல்லூரியில் ஆகஸ்ட் 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் வருகிற ஆகஸ்ட் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

மாதம்பட்டியில் ரூ.55 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

மாதம்பட்டி அருகே ரூ. 55 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் மீட்டனா். கோவை அருகே அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவா் கோயிலின் துணைக் கோயிலான அன்னியூரம்மன் கோயில் மாதம்பட்ட... மேலும் பார்க்க