செய்திகள் :

ரத்தினம் கல்லூரியில் ஆகஸ்ட் 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் வருகிற ஆகஸ்ட் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈச்சனாரி, பொள்ளாச்சி சாலையில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில், கோவை, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து உற்பத்தித் துறை, ஜவுளித் துறை, பொறியியல், கட்டுமானம், ஐ.டி. துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத் துறை, மருத்துவம் என 250-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

8-ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயின்றவா்கள், செவிலியா்கள், பொறியியல் மாணவா்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம்.

முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி முற்றிலும் இலவசம். முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும். முகாமில் தோ்வுசெய்யப்படும் தோ்வா்களுக்கு, பணிநியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். பணிநியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

வேலை தேடுவோா் மேலும் விவரங்களுக்கு 0422 - 2642388, 9499055937 என்ற எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

கோவை சிட்கோ பகுதியில் மூன்றுசக்கர மிதிவண்டியும், சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்தாா். கோவை அருகேயுள்ள சிட்கோ பிள்ளையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (65). இவருக்கு... மேலும் பார்க்க

தலைமைக் காவலரை மிரட்டிய இளைஞா் கைது

வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவா் கிருஷ்ணமூா்த்தி. இவா், தமிழ்நா... மேலும் பார்க்க

வீடு புகுந்து 11 பவுன் திருட்டு: ஒடிஸா இளைஞா்கள் கைது

கோவையில் வீடு புகுந்து நகைகளைத் திருடியதாக ஒடிஸா மாநில இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.கோவை, பீளமேடு உடையாம்பாளையம் என்.ஜி.ஆா். வீதியைச் சோ்ந்தவா் தீபன்ராஜ் (34). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்ட... மேலும் பார்க்க

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

கோவையில் மனைவி இறந்த தூக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.கோவை, சுந்தராபுரம் குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2-ஆவது பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா் (46). இவரது மனைவி கௌசல்யா மஞ்... மேலும் பார்க்க

கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து

வால்பாறை மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் மணல் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பொள்ளாச்சியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு வால்பாறையை நோக்கி டிப்பா் லாரி செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண... மேலும் பார்க்க

மாதம்பட்டியில் ரூ.55 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

மாதம்பட்டி அருகே ரூ. 55 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் மீட்டனா். கோவை அருகே அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவா் கோயிலின் துணைக் கோயிலான அன்னியூரம்மன் கோயில் மாதம்பட்ட... மேலும் பார்க்க