செய்திகள் :

திருவாரூர்: பேச மறுத்த காதலி வீட்டில் நண்பர்களுடன் ரகளை செய்த காதலன்- சண்டையை விலக்க சென்றவர் கொலை!

post image

திருவாரூர் மாவட்டம், பாண்டுகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஆதம் வயது 23. இவர் தென்காசி, பறையபட்டி பகுதியில் வசித்து வருகிறார். திருவாரூர் புலிவலம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண் வயது 22. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இளம் பெண் ஆதமுடன் போனில் பேசுவதை தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.

கொலை செய்த ஆதம்

இந்த நிலையில் திருவாரூக்கு வந்த ஆதம் தனது நண்பர்கள் பாண்டுகுடியை சேர்ந்த முகமது ராகுல்தீன் மற்றும் தென்காசியை சேர்ந்த ஹாஜ் முகமது ஆகியோரை அழைத்து கொண்டு நேற்று நள்ளிரவு காதலியான இளம் பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது இளம் பெண்ணை பார்த்து என்னிடம் ஏன் பேசுவதில்லை என கேட்டுள்ளார் ஆதம். மேலும் மூன்று பேரும் அந்த பெண் வீட்டில் தகராறு செய்துள்ளனர்.

அப்போது, நான் உங்க மகளை காதலிக்கும் போது வாங்கி கொடுத்த பொருட்களையும் செலவு செய்த பணத்தையும் திருப்பிக் கொடுங்கள் என இளம் பெண்ணின் அம்மாவிடம் ஆதம் கேட்டுள்ளார். இதையடுத்து பெண்ணின் அண்ணன் கோபி கிருஷ்ணன் ஆதமையும், அவரது நண்பரகளையும் அங்கிருந்து போக சொல்லியுள்ளார். ஆனால் மூவரும் கேட்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கடும் வாக்கு வாதம் கைகலப்பாக மாறியது.

இந்த நிலையில், அதே தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார், தட்சிணாமூர்த்தி ஆகிய இருவர் சண்டையை விலக்கியுள்ளனர். அப்போது ஆதம் தான் வைத்திருந்த கத்தியால் சந்தோஷ்குமார் மற்றும் தட்சிணாமூர்த்தி இருவரையும் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்தோஷ்குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த தட்சிணாமூர்த்தியை அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சந்தோஷ்குமார், திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தியால் குத்தியதும் ஆதம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரது நண்பர்களான ராகுல்தீன் மற்றும் ஹாஜ் முகமது ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி: போலீஸ் தாக்கியதில் 80 வயது மூதாட்டி மரணமா?- உறவினர்கள் குற்றச்சாட்டும், காவல்துறை விளக்கமும்!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் சூசைமரியாள்(80). இவரது பேரனை ஒரு வழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு நான்கு காவலர்கள் இன்று ஆதிகாலையில் வீட்டிற்க... மேலும் பார்க்க

போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை.. சென்னையில் 3 பேர்கைது; பின்னணி என்ன?

சென்னையில் போதைக்காக சிலர் உடல் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. அதனால், பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருக... மேலும் பார்க்க

``நீ எப்படி மோடியை விமர்சிக்கலாம்..." - சு.வெங்கடேசனுக்கு வந்த கொலை மிரட்டல் - வலுக்கும் கண்டனம்!

நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் ஆளும் அரசையும், பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும் கடுமையான கேள்விகளை முன்வைத்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சு.வெங்கடேசனுக்கு கொலை ம... மேலும் பார்க்க

நெல்லை: அரிவாளுடன் ஊரை பதற வைத்த சிறுவர்கள்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு! நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம் பாப்பாகுடி அருகே உள்ள இடைக்கால் பகுதியைச் சேர்ந்த இரு இளஞ்சிறார், நேற்று இரவு ஊருக்கு ஒதுக்கு புறமான குளக்கரை பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மாற்று சம... மேலும் பார்க்க

சென்னை: நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வடமாநில இளைஞர் கைது

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 30 வயதாகும் இளம்பெண் ஒருவர் கடந்த 26.07.2025-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை நேரத்தில் (27.07.2025), அவரின் அருகில் ஆ... மேலும் பார்க்க

Digital arrest scam: 3 மாதத்தில் ரூ.19 கோடி இழந்த டாக்டர்.. வங்கி கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி

பணமோசடி, போதைப்பொருள் வழக்குகளில் சிக்கி இருப்பதாக கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுவதாக மிரட்டி, முதியவர்கள், பெண்களிடம் சைபர் கிரிமினல்கள் பணம் பறித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு வி... மேலும் பார்க்க