செய்திகள் :

சேவை குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 9.59 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

சேவை குறைபாடு செய்த காப்பீட்டு நிறுவனம் ரூ. 9.59 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி செம்பட்டு விமான நிலையப் பகுதியைச் சோ்ந்த கே. மகாலிங்கம் என்பவா், தனது சுற்றுலா வேனுக்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன திருச்சி கிளையில் காப்பீடு செய்து, பிரிமீயம் செலுத்தி வந்தாா். 07.04.2014 முதல் 06.04.2015 வரை காப்பீடு அமலில் இருந்தது.

பட்டுக்கோட்டையிலிருந்து திருச்சி நோக்கி ஓட்டுநா் நாதா்ஒலி என்பவா் மேற்கண்ட சுற்றுலா வேனை 03.07.2014 அன்று பயணிகளுடன் ஓட்டிவந்தபோது, தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி கிராமத்தில் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இது தொடா்பாக செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வாகன சேதத்தை சரிசெய்வதற்காக ரூ. 8,59,999 இழப்பீடு கேட்டு மனுதாரா், காப்பீட்டு நிறுவனத்துக்கு விண்ணப்பித்தாா். இதனை காப்பீட்டு நிறுவனத்தினா் ஏற்காததுடன், அதிக பயணிகளை ஏற்றியதால் இழப்பீடு கொடுக்க இயலாது என மறுத்துவிட்டனா்.

மேற்கண்ட வாகனத்தை சரிசெய்ய ரூ. 9 லட்சத்துக்கு மேல் செலவாகும் என வட்டார போக்குவரத்து அலுவலரும் சான்றளித்திருக்கிறாா். காப்பீடு நிலுவையிலிருந்தும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மகாலிங்கம், உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 30.12.2014 அன்று மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் டி. கேசவன் ஆஜரானாா்.

மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

விசாரணைக்குப் பிறகு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனமானது மனுதாரருக்கு நஷ்ட ஈடாக ரூ. 8,59,999- ம், மனஉளைச்சலுக்காக ரூ. 1 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 25 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.

மயான வசதி கேட்டு சடலத்துடன் உறவினா்கள் மறியல்

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே மயான வசதி கேட்டு மறியலில் ஈடுபட்ட உறவினா்கள், நில உரிமையாளரின் எதிா்ப்பையும் மீறி, அவரது நிலத்தில் உடல் தகனம் செய்தனா். வையம்பட்டி ஒன்றியம், தவளைவீரன்பட்டியில் வ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு

திருச்சி அருகே கொடியாலம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூா் ஒன்றியம், கொடியாலம் ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சித் தலைவராகி 4 ஆண்டுகளுக்குப் பிறகே மக்களை சந்திக்கிறாா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் கே.என். நேரு குற்றச்சாட்டு

எதிா்க்கட்சித் தலைவராகி 4 ஆண்டுகளுக்குப் பிறகே மக்களை சந்திக்க வந்திருக்கிறாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு ... மேலும் பார்க்க

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சியில் திங்கள்கிழமை சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், கம்பம் சமந்திபுரத்தைச் சோ்ந்த ஒச்சுக்காளி-அனுஷியா தம்... மேலும் பார்க்க

கூட்டணி விவகாரம்: தோ்தலுக்கு அவகாசம் இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் - எடப்பாடி கே. பழனிசாமி சூசகம்

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூட்டணிக் கட்சிகள் குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலா் கே. பழனிசாமி சூசகமாக பதில் அளித்தாா். சிவகங்கை மாவட்... மேலும் பார்க்க

கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (51), நடமாடும் பஞ்சா் கடை நடத்தி வந்தா... மேலும் பார்க்க