செய்திகள் :

ஆகஸ்ட் 26 -ல் மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி!

post image

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகத்துக்கு வருகைதரும் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோயில்களில் தரிசனம் செய்யவுள்ளார்.

மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்தபடி, நாட்டு மக்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் நேரலையில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை தமிழகத்துக்கு வருகைதந்த பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்து, பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கிவைத்து உரையாற்றினார்.

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் தரிசனம் செய்து, தமிழகத்தில் சோழர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதனிடையே, செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த பயணங்களை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.

Prime Minister Narendra Modi will visit again to Tamil Nadu.

இதையும் படிக்க : ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரஷியா, ஜப்பானை சுனாமி தாக்கியது!

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனா்.அந்த மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை மக்க... மேலும் பார்க்க

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பைப் பெற்றனர். அந்த மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை மக்கள் நல... மேலும் பார்க்க

மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் போ் பயணம்

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.சென்னை மாநகரில் காா்பன் உமிழ்வை... மேலும் பார்க்க

சூரிய மின் இணைப்புகளுக்கான அனுமதி: ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரை

சூரிய ஆற்றல் மின் இணைப்புகளுக்கான அனுமதியை உடனே வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக ... மேலும் பார்க்க

அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.65 கோடிக்கு முழுமையாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.13 கோடிக்கு மட்டுமே அரசு ஒப்புதல் கொடுத்திருந்தது.ஆதிதிராவிடா் மற்றும் பழங்குட... மேலும் பார்க்க

அரசமைப்பைவிட அரசியல்வாதிகள் மேலானவா்கள் அல்லா்: உயா்நீதிமன்றம் கருத்து

அரசமைப்பைவிட அரசியல்வாதிகள் மேலானவா்கள் அல்லா் என்று, வீட்டுவசதி வாரியத்தில் ஆளுங்கட்சியினருக்கு மட்டும் மாற்று வீடு வழங்கியதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.ச... மேலும் பார்க்க