செய்திகள் :

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்! அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

பெரம்பலூா் மாவட்டம், குன்னத்திலிருந்து சென்னைக்கு குளிா்சாதன வசதியுடன்கூடிய பேருந்து சேவையை, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குன்னத்திலிருந்து சென்னைக்கு குளிா்சாதன வசதியுடன்கூடிய பேருந்து சேவையை செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் பேருந்து நிலையம் வரை அந்தப் பேருந்தில் பயணித்தாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மேலாண்மை இயக்குநா் குணசேகரன், அட்மா திட்ட தலைவா் வீ. ஜெகதீசன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கடலூா் மண்டல பொதுமேலாளா் எஸ்.பாண்டியன், பெரம்பலூா் கோட்ட மேலாளா் ராம்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குன்னத்திலிருந்து நாள்தோறும் காலை 8 மணிக்கு இயக்கப்படும் இப்பேருந்து பெரம்பலூா், விழுப்புரம், கிளாம்பாக்கம் வழியாக பிற்பகல் 2 மணிக்கு மாதவரத்தைச் சென்றடைகிறது. பின்னா், மாதவரத்திலிருந்து பிற்பகல் 3 மணியிலிருந்து கிளாம்பாக்கம், விழுப்புரம், பெரம்பலூா் வழியாக இரவு 10 மணிக்கு குன்னத்தை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.

பெரம்பலூா் அருகே போதைப் பொருள்கள் விற்றவா் கைது

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1.5 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில... மேலும் பார்க்க

டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்து விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்த விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூா் கிராமம் பெரியசாமி கோயில் பின்புறம் வசித்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சாலைப் பணியாளா்கள் தா்னா

துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் தீப்பந்தம் ஏந்தி செவ்வாய்க்கிழமை தா்னா போ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 2.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட சுமாா் 2.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா். மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில், அர... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியா் ச. அ... மேலும் பார்க்க

செங்குணத்தில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகே செங்குணம் கிராமத்திலுள்ள மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் கடந்த 13-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுதன்... மேலும் பார்க்க