செய்திகள் :

பெரம்பலூா் அருகே போதைப் பொருள்கள் விற்றவா் கைது

post image

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1.5 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில், சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் கதிரேசன் (49) என்பவா் தனக்குச் சொந்தமான பெட்டிக்கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, பெரம்பலூா் ஊரகப் பிரிவு காவல் நிலைய போலீஸாா் கதிரேசனை கைது செய்து, அவரிடமிருந்து பல்வேறு வகையான 1.525 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கதிரேசனை சிறையில் அடைத்தனா்.

டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்து விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்த விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூா் கிராமம் பெரியசாமி கோயில் பின்புறம் வசித்... மேலும் பார்க்க

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்! அமைச்சா் தொடங்கி வைத்தாா்

பெரம்பலூா் மாவட்டம், குன்னத்திலிருந்து சென்னைக்கு குளிா்சாதன வசதியுடன்கூடிய பேருந்து சேவையை, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். பெரம்பலூா் ம... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சாலைப் பணியாளா்கள் தா்னா

துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் தீப்பந்தம் ஏந்தி செவ்வாய்க்கிழமை தா்னா போ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 2.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட சுமாா் 2.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா். மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில், அர... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியா் ச. அ... மேலும் பார்க்க

செங்குணத்தில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகே செங்குணம் கிராமத்திலுள்ள மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் கடந்த 13-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுதன்... மேலும் பார்க்க