செய்திகள் :

உகாண்டா - தெற்கு சூடான் எல்லையில் ராணுவப் படைகள் மோதல்! 4 பேர் பலி!

post image

உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் எல்லையில், இருநாட்டு படைகளும் இடையிலா துப்பாக்கிச் சூடு மோதலில், சுமார் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு சூடானின் ராணுவப் படைகள், கடந்த ஜூலை 28 ஆம் தேதியன்று உகாண்டா ராணுவத்தினர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், உகாண்டா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு, பதிலடியாக உகாண்டா ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில், 3 தெற்கு சூடான் வீரர்கள் கொல்லப்பட்டதாக, உகாண்டா ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தெற்கு சூடானின் அதிகாரிகள் தாக்குதலில் பலியான 5 வீரர்களின் உடல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

முன்னதாக, வடமேற்கு உகாண்டாவின் வெஸ்ட் நைல் பகுதியில், எல்லையைக் கடந்து வந்து தெற்கு சூடான் படையினர் முகாமிட்டு அங்கிருந்து வெளியேற மறுத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால், அவர்களின் மீது உகாண்டா ராணுவம் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒப்புக்கொண்டதன் மூலம் சண்டை நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தெற்கு சூடானின் அதிபர் சால்வா கீர் தலைமையிலான அரசு படைகளுக்கும், அந்நாட்டின் துணை அதிபர் ரெயிக் மச்சாரின் ஆதரவுப் படைகளுக்கும் இடையில் மோதல் நிலவி வருகின்றது.

இதில், அதிபர் சால்வா கீர்-க்கு ஆதரவாக உகாண்டா அரசு தனது படைகளை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்! பிரான்ஸ் உள்பட 15 நாடுகள் வலியுறுத்தல்!

At least four people have been killed in a gunfight between Ugandan and South Sudanese forces on the border.

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.”இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ விவாதத்தில் இந்திய தலைவா்கள் பேச்சு: பாகிஸ்தான் விமா்சனம்

ஆபரேஷன் சிந்தூரின்போது மக்களவையில் இந்திய தலைவா்கள் தெரிவித்த கருத்துகளை பாகிஸ்தான் விமா்சித்துள்ளது. அதேவேளையில், இந்தியாவுடன் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தை நடத்துவதில் ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அந்நாட... மேலும் பார்க்க

சிறுவா்கள் யு-டியூப் பயன்படுத்தத் தடை

சிறுவா்கள் பயன்படுத்தவதற்குத் தடை விதிக்கப்படவிருக்கும் சமூக ஊடகங்களில் விடியோ பகிா்வுத் தளமான யு-டியூபும் அடங்கும் என்று ஆஸ்திரேலிய அரசு புதன்கிழமை அறிவித்தது.சிறுவா்கள் சீரழிவதைத் தடுக்கும் வகையில் ... மேலும் பார்க்க

காஸா: பட்டினிச் சாவு 154-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 154-ஆக உயா்ந்துள்ளது.இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையி... மேலும் பார்க்க

துரிதமாக பெண்ணின் உயிா்காத்த இந்திய தொழிலாளா்களுக்கு ரூ.43 லட்சம் நிதி: சிங்கப்பூா் மக்கள் திரட்டினா்

சிங்கப்பூரின் டான்ஜோங் கடோங் சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தில் விழுந்த காரில் சிக்கிய பெண்ணை துணிச்சலுடன் மீட்ட ஏழு இந்திய தொழிலாளா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், பொதுமக்களிடமிருந்து 70,000... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தம்: தாய்லாந்து - கம்போடியா மீண்டும் உறுதி

எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வந்த சண்டை நிறுத்தப்பட்டுள்ளதை தாய்லாந்தும் கம்போடியாவும் புதன்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தின. ஷாங்காய் நகரில் சீனா முன்னிலையில் சந்தித்த இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இதற்க... மேலும் பார்க்க