செய்திகள் :

பாரத் மாதா கி ஜெய்... பாகிஸ்தானுடன் விளையாட மறுத்ததுக்கு இந்தியா விளக்கம்!

post image

லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் (டபிள்யூசிஎல்) தொடரில் இருந்து இந்தியா சாம்பியன்ஸ் அணியினர் “எங்களது நாட்டை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என விலகியதுக்கு காரணம் கூறியுள்ளார்கள்.

ஓய்வுபெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இந்த டபிள்யூசிஎல் தொடரில் அந்தந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகிறார்கள்.

இந்தப் போட்டியில் அரையிறுதில் இந்தியா சாம்பியன்ஸ் அணியும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியும் மோதுவதாக இருந்தது.

காரணம் என்ன?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படி இந்திய அணியினர் பாகிஸ்தானுடன் விளையாடுவதை மறுத்துள்ளனர்.

ஏற்கெனவே, இந்தத் தொடரில் லீக் போட்டியில் ஒருமுறை இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சாம்பியன்ஸ் அணி வெளியேறியதால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மற்றுமொரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியும் ஆஸி. அணியும் மோதுகின்றன.

ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா சாம்பியன்ஸ் அணியினரின் விளக்கம்

இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்தியா சாம்பியன்ஸ் அணியினர் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் அவர்கள் கூறியதாவது:

நாங்கள் பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம். எங்களது நாடுதான் எப்போதும் எங்களுக்கு முதன்மையானது. பிறகுதான் மற்றவை. இந்திய அணியின் உறுப்பினர்கள் என்பதில் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.

நாங்கள் கடினமாக உழைத்து இந்திய கொடியை எங்கள் சட்டைகளில் அணிந்துள்ளோம். எப்போதும், எங்கள் நாட்டை கீழிறக்க மாட்டோம். பாரத் மாதா கி ஜெய்.

ஒருவேளை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடும்படி வந்திருந்தாலும் நாங்கள் மறுத்திருப்போம். இந்தியர்களாகிய நாங்கள் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருப்போம் எனக் கூறியுள்ளார்கள்.

இந்தியா சாம்பியன்ஸ் அணியினர் தங்களது எக்ஸ் பக்கத்திலும் எங்கள் கொள்கைகளில் இருந்து மாறமோட்டோம். நாடுதான் பிரதானம் எனக் கூறியுள்ளார்கள்.

The India Champions team has given the reason for withdrawing from the Legends World Championship (WCL) series as "we will never give up on our country".

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்டில் மழை குறுக்கீடு!

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழையால் தாமதமாகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இந்தப் போ... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்த ஷுப்மன் கில்!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இந்த... மேலும் பார்க்க

கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதானம்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல... மேலும் பார்க்க

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்திய அம்பத்தி ராயுடு; முதலிடம் யாருக்கு?

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வரிசைப்படுத்தியுள்ளார்.இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு அண்மையில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்ச... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: டெவான் கான்வே அரைசதம்; நியூசி. 174 ரன்கள் குவிப்பு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே... மேலும் பார்க்க