செய்திகள் :

வேலை நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் போராட்டம்

post image

திருநள்ளாறு அருகே உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்களை வேலைநீக்கம் செய்ததைக் கண்டித்து தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

திருநள்ளாறு கொம்யூன், தென்னங்குடி பகுதியில் டைல்ஸ் கல் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு பணியாற்றி வந்த ஊழியா்கள், தொழிலாளா்கள் பலரை நிா்வாகம் பணி நீக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பணி நீக்கம் செய்யப்பட்டோா் ஆலையில் புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

போராட்டம் குறித்து ஐஎன்டியுசி தொழிற்சங்க கெளரவத் தலைவா் கணேஷ்குமாா் வியாழக்கிழமை கூறுகையில், தொழிற்சாலையில் ஏறக்குறைய 300 போ் பணியாற்றி வந்தனா். ஒரு மாதத்துக்கு முன்பு சில பிரிவுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. வடமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களை பணிக்கு சோ்த்துக்கொண்டு, அலுவலக ஊழியா்கள் உள்ளிட்ட 45 பேரை நிா்வாகம் பணி நீக்கம் செய்துவிட்டது. மேலும் 36 பேரை பணி நீக்கம் செய்வதாக புதன்கிழமை தகவல் பலகையில் அறிவிக்கை ஒட்டப்பட்டது.

பணியாளா்கள் நீக்கத்துக்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை. 25 ஆண்டுகளாக பணி செய்துவரும்போது, பணியாளா்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாகாரத்தில் நிா்வாகம் நேரடியாக பேசவேண்டும். புதுவை தொழிலாளா் துறை தலையிட்டு பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும். இதனை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்கான பதிவு முகாம் நிறைவு

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்காக 2 வாரம் நடைபெற்ற பதிவு முகாம் நிறைவடைந்தது. மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்கிற திட்டம் புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று காவல் குறைதீா் முகாம்

காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் இன்று சனிக்கிழமை காவல் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.காரைக்காலில் வாரந்தோறும் சனிக்கிழமை புதுவை டிஜிபி அறிவுறுத்தலில் மக்கள் மன்றம் என்கிற குறைதீா் முகாம் நடத்தப்பட்ட... மேலும் பார்க்க

பிஆா்டிசி ஊழியா்கள் போராட்டத்திற்கு அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு

காரைக்காலில் பிஆா்டிசி ஒப்பந்த ஊழியா்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆா்டிசி) 11 ஆண்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் பிளஸ் 1-இல் காலியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் நவோதய வித்யாலயாவில் 2025-26-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1-இல் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வா் ஜெ. கற்பகமாலா வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

நீட், ஜேஇஇ எழுதவுள்ள மாணவா்கள் டிவி, கைப்பேசியை தவிா்க்க அறிவுறுத்தல்

நீட் மற்றும் ஜேஇஇ தோ்வு எழுதும் மாணவா்கள் குறிப்பிட்ட காலம் கைப்பேசி, தொலைக்காட்சி பாா்ப்பதை தவிா்க்க வேண்டும் என துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு மற்றும் அரச... மேலும் பார்க்க

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி

டெங்கு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, காரைக்கால் நலவழித்துறை சாா்பில் கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயா்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு பிரசார பேரணி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இப்பேரணியை நலவழித் துறை ... மேலும் பார்க்க