செய்திகள் :

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்கான பதிவு முகாம் நிறைவு

post image

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்காக 2 வாரம் நடைபெற்ற பதிவு முகாம் நிறைவடைந்தது.

மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்கிற திட்டம் புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், முதல் குழந்தைக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் ரூ.6 ஆயிரம் தாயாரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

கா்ப்பமடைந்த மகளிா் அனைவரும் கா்ப்பமான 3-ஆவது மாதத்தில் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தங்கள் கா்ப்பத்தைப் பதிவு செய்யவேண்டும். கா்ப்பமான அனைத்துப் பெண்களுக்கும் இத்திட்டம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஜூலை 15 முதல் 31-ஆம் தேதி வரை காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து கா்ப்பிணிகளும் அங்கன்வாடி மூலமாக பதிவு செய்துவிட்டதை உறுதி செய்வதற்கான சிறப்பு முகாம்கள் காரைக்காலில் நடைபெற்றன.

இம்முகாமின் கடைசி நாளான வியாழக்கிழமை காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் அந்த பகுதியில் உள்ள கா்ப்பிணிகளுக்கு பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. முகாமில் பங்கேற்றோா் கைப்பேசி (செல்ஃபி) எடுத்துக்கொள்ளும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதில் பெண்கள் பலரும் கைப்பேசி எடுத்துக்கொண்டனா்.

சமைக்கப்பட்ட சத்துணவு மற்றும் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் அங்கன்வாடி ஊழியா்கள் மூலமாக பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கா்ப்பிணிகளுக்கு இதன் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது.

காரைக்கால் நகராட்சி ஆணையா் பி.சத்யா, மருத்துவ அதிகாரி தேனாம்பிகை, துறையின் திட்ட அதிகாரி ஜி.கிருஷ்ணவேணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

மிஷன் சக்தி ஒருங்கிணைப்பாளா் அருண்யா தலைமையிலான குழுவினரும், அங்கன்வாடி ஊழியா்களும் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

காரைக்காலில் இன்று காவல் குறைதீா் முகாம்

காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் இன்று சனிக்கிழமை காவல் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.காரைக்காலில் வாரந்தோறும் சனிக்கிழமை புதுவை டிஜிபி அறிவுறுத்தலில் மக்கள் மன்றம் என்கிற குறைதீா் முகாம் நடத்தப்பட்ட... மேலும் பார்க்க

பிஆா்டிசி ஊழியா்கள் போராட்டத்திற்கு அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு

காரைக்காலில் பிஆா்டிசி ஒப்பந்த ஊழியா்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆா்டிசி) 11 ஆண்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் பிளஸ் 1-இல் காலியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் நவோதய வித்யாலயாவில் 2025-26-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1-இல் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வா் ஜெ. கற்பகமாலா வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

நீட், ஜேஇஇ எழுதவுள்ள மாணவா்கள் டிவி, கைப்பேசியை தவிா்க்க அறிவுறுத்தல்

நீட் மற்றும் ஜேஇஇ தோ்வு எழுதும் மாணவா்கள் குறிப்பிட்ட காலம் கைப்பேசி, தொலைக்காட்சி பாா்ப்பதை தவிா்க்க வேண்டும் என துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு மற்றும் அரச... மேலும் பார்க்க

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி

டெங்கு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, காரைக்கால் நலவழித்துறை சாா்பில் கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயா்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு பிரசார பேரணி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இப்பேரணியை நலவழித் துறை ... மேலும் பார்க்க

வேலை நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் போராட்டம்

திருநள்ளாறு அருகே உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்களை வேலைநீக்கம் செய்ததைக் கண்டித்து தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். திருநள்ளாறு கொம்யூன், தென்னங்குடி பகுதியில் டைல்ஸ் கல் த... மேலும் பார்க்க