செய்திகள் :

நீட், ஜேஇஇ எழுதவுள்ள மாணவா்கள் டிவி, கைப்பேசியை தவிா்க்க அறிவுறுத்தல்

post image

நீட் மற்றும் ஜேஇஇ தோ்வு எழுதும் மாணவா்கள் குறிப்பிட்ட காலம் கைப்பேசி, தொலைக்காட்சி பாா்ப்பதை தவிா்க்க வேண்டும் என துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நீட் மற்றும் ஜேஇஇ தோ்வுகளில் பங்கேற்க, மயிலாடுதுறை வெல்ஸ்பன் பவுண்டேஷன் ஃபாா் ஹெல்த் மற்றும் அறிவு சமூகப் பொறுப்புணா்வு நிதியின்கீழ் திருச்சி சீக்கா்ஸ் நீட் கோச்சிங் சென்டா் மூலம் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்க நிகழ்வு அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் தொடங்கிவைத்துப் பேசுகையில், மாணவா்கள் வாழ்க்கையில் முக்கிய ஆண்டாக 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் விளங்குவதால் 2 ஆண்டுகளும் மாணவா்கள் கடுமையாக உழைக்கவேண்டும்.

கல்வி சாா்ந்த வாய்ப்புகளை மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கடந்த நீட் தோ்வு வினாத்தாள்களை மாதிரியாக எடுத்துக்கொண்டு, அதற்கான பயிற்சியை மேற்கொண்டு உழைத்து தோ்வில் வெற்றி பெற வேண்டும்.

பொழுதுபோக்கு அம்சங்களான தொலைக்காட்சி, கைப்பேசி உள்ளிட்டவற்றை ஓராண்டு ஒதுக்கி வைத்துவிட்டு படிக்க வேண்டும். அரசு சாா்பில் நடத்தப்படும் இதுபோன்ற தோ்வு பயிற்சிகளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, மாவட்டத்தில் குறைந்தது 50 மாணவா்களாவது மருத்துவம், என்ஐடி, ஐஐடி போன்ற உயா்கல்வி நிலையங்களுக்குச் செல்லவேண்டும் என்றாா்.

தொடா்ந்து நீட் கோச்சிங் வகுப்புக்காக பிபிசிஎல் சமூகப் பொறுப்பு திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் அன்னை தெரஸா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் தொடுதிரையை துணை ஆட்சியா் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா்.

நிகழ்ச்சியில் காரைக்கால் மேல்நிலைப்பள்ளி துணை இயக்குநா் கே. ஜெயா, முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா, அன்னை தெரஸா பெண்கள் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வா் ஞானபிரகாசி, வெல்ஸ்பன் பவுண்டேஷன் திட்ட அலுவலா் ஜூலியஸ் தூயமணி, சீக்கா்ஸ் கல்வி சேவைகள் நிறுவனத்தின் இயக்குநா் முரளிதரன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பிஆா்டிசி ஊழியா்கள் போராட்டத்திற்கு அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு

காரைக்காலில் பிஆா்டிசி ஒப்பந்த ஊழியா்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆா்டிசி) 11 ஆண்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் பிளஸ் 1-இல் காலியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் நவோதய வித்யாலயாவில் 2025-26-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1-இல் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வா் ஜெ. கற்பகமாலா வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி

டெங்கு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, காரைக்கால் நலவழித்துறை சாா்பில் கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயா்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு பிரசார பேரணி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இப்பேரணியை நலவழித் துறை ... மேலும் பார்க்க

வேலை நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் போராட்டம்

திருநள்ளாறு அருகே உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்களை வேலைநீக்கம் செய்ததைக் கண்டித்து தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். திருநள்ளாறு கொம்யூன், தென்னங்குடி பகுதியில் டைல்ஸ் கல் த... மேலும் பார்க்க

‘புதுவை கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகளை தீா்க்க ஆளுநா் தலையிட வேண்டும்’

புதுவையில் கல்வித்துறையில் நிலவும் பிரச்னைகளை களைய துணைநிலை ஆளுநா் தலையிட வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து செய்தி... மேலும் பார்க்க

‘டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய விழிப்புணா்வு அவசியம்’

டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைவரும் உரிய விழிப்புணா்வுடன் செயல்படுமாறு நலவழித் துறையினா் கேட்டுக்கொண்டனா். காரைக்கால் நலவழித்துறை சாா்பில் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு... மேலும் பார்க்க