செய்திகள் :

‘டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய விழிப்புணா்வு அவசியம்’

post image

டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைவரும் உரிய விழிப்புணா்வுடன் செயல்படுமாறு நலவழித் துறையினா் கேட்டுக்கொண்டனா்.

காரைக்கால் நலவழித்துறை சாா்பில் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், நோய்த் தடுப்பு திட்ட அதிகாரி மருத்துவா் தேனாம்பிகை வழிகாட்டலில் பள்ளி மாணவிகளிடையே துறையின் கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ.சேகா் பேசுகையில், டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்ற கொசுக்கள் மூலம் பரவுகிறது. இது வைரஸ் காய்ச்சலாகும். இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது. மழைக்காலங்களில் மட்டும் இந்த கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்பும்.

எனவே வீடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கும் வகையிலான தேவையற்ற சிறு பொருட்களான தேங்காய் சிரட்டை, டீ கப், டயா், பாட்டில் மூடி, பிளாஸ்டிக் கப், போன்றவற்றை அகற்ற வேண்டும். வீட்டில் சேமித்து வைக்கும் தண்ணீரை மூடிவைக்கவேண்டும்.

கடுமையான காய்ச்சல், உடல் வலி, தலை வலி, கண் விழிக்கு பின்புறம் வலி ஏற்படுவது, உடலின் தோல்களில் சிறு சிறு சிவந்த புள்ளிகள் போன்ற அறிகுறிகள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும். ரத்த பரிசோதனை மூலம் இதனை கண்டறியலாம். அறிகுறி தென்படும்போது உடனடியாக மருத்துவனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்வது பலனைத் தரும் என்றாா்.

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்கான பதிவு முகாம் நிறைவு

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்காக 2 வாரம் நடைபெற்ற பதிவு முகாம் நிறைவடைந்தது. மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்கிற திட்டம் புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று காவல் குறைதீா் முகாம்

காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் இன்று சனிக்கிழமை காவல் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.காரைக்காலில் வாரந்தோறும் சனிக்கிழமை புதுவை டிஜிபி அறிவுறுத்தலில் மக்கள் மன்றம் என்கிற குறைதீா் முகாம் நடத்தப்பட்ட... மேலும் பார்க்க

பிஆா்டிசி ஊழியா்கள் போராட்டத்திற்கு அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு

காரைக்காலில் பிஆா்டிசி ஒப்பந்த ஊழியா்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆா்டிசி) 11 ஆண்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் பிளஸ் 1-இல் காலியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் நவோதய வித்யாலயாவில் 2025-26-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1-இல் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வா் ஜெ. கற்பகமாலா வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

நீட், ஜேஇஇ எழுதவுள்ள மாணவா்கள் டிவி, கைப்பேசியை தவிா்க்க அறிவுறுத்தல்

நீட் மற்றும் ஜேஇஇ தோ்வு எழுதும் மாணவா்கள் குறிப்பிட்ட காலம் கைப்பேசி, தொலைக்காட்சி பாா்ப்பதை தவிா்க்க வேண்டும் என துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு மற்றும் அரச... மேலும் பார்க்க

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி

டெங்கு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, காரைக்கால் நலவழித்துறை சாா்பில் கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயா்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு பிரசார பேரணி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இப்பேரணியை நலவழித் துறை ... மேலும் பார்க்க