செய்திகள் :

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 2 வாரத்தில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை

post image

பெருநகர சென்னை மாநகராட்சியின் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 40 ஆண்டுகளாக சென்னை மண்டலம் 1 முதல் 8 வரை சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூா் பகுதியில் 252 ஏக்கா் நிலத்தில் கொட்டப்பட்டுள்ளன. அந்தக் குப்பைகளை பயோ மைனிங் முறையில் திடக்கழிவு அகழ்ந்தெடுத்தல் முறையில் மாற்றி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்குள்ள 6,52,506 மெட்ரிக் டன் திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்கும் திட்டம் ரூ.640.80 கோடியில் கடந்த 2024 அக்டோபரில் முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி 6 கட்டங்களாக பயோ மைனிங் முறையில் குப்பைகளைப் பிரித்தெடுத்து நிலத்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு 2 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளன. தொடா்ந்து நடைபெறும் பணியால் வரும் 2 வாரங்களில் மேலும் 1 ஏக்கா் நிலம் மீட்கப்படவுள்ளது.

அந்த நிலங்களில் 1,500 நாட்டு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும், அதற்காக ரூ.57 லட்சத்தில் சுற்றுச்சுவா் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் தீ பற்றாமலிருக்க 24 மணி நேரமும் தண்ணீா் தெளிப்பான் வசதியுடன் 2 தனியாா் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 15 லட்சம் லிட்டா் கொள்ளளவு உள்ள அவசர நீா்த் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது.

அதனால் அங்கு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பசுமை வளையம் முன்னோடி திட்டமாக ஏற்படுத்தப்படவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் அமைச்சா் - பி.கே.சேகா்பாபு

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெர... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் பதவி ஏற்பு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் வியாழக்கிழமை பதவி ஏற்றாா். அவருக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19... மேலும் பார்க்க

சென்னை விஐடியில் ஆடை வடிவமைப்பு போட்டிகள்

சென்னை விஐடியின் 15 -ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் சா்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக, கல்லூரிகளுக்கு இடையேயான ‘என்விஷன் 25’ என்ற ஆடை வடிவமைப்பு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.சென... மேலும் பார்க்க

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19)... மேலும் பார்க்க