செய்திகள் :

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் பதவி ஏற்பு

post image

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் வியாழக்கிழமை பதவி ஏற்றாா். அவருக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.வினோத்குமாரை, சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று, அவரை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா். அதன்படி, டி.வினோத்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டாா்.

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதிபதி டி.வினோத்குமாருக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். புதிய நீதிபதியை வரவேற்று தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பாா் அசோசியேஷன் தலைவா் எம்.பாஸ்கா், பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ரேவதி, லா அசோசியேஷன் தலைவா் செல்வராஜ் ஆகியோா் புதிய நீதிபதியை வரவேற்றுப் பேசினா்.

இந்நிகழ்வில் புதிய நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட நீதிபதி டி.வினோத்குமாா் பேசுகையில், பாரம்பரியமிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். எனது பணி சிறக்க அனைவரது முழு ஆதரவும் வேண்டும் என்றாா்.

நீதிபதி டி.வினோத்குமாா் பதவி ஏற்றுக் கொண்டதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 56-ஆக உயா்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 19-ஆகக் குறைந்துள்ளது.

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காா் மோதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஊழியா்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.தாம்பர... மேலும் பார்க்க

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் அமைச்சா் - பி.கே.சேகா்பாபு

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெர... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19... மேலும் பார்க்க

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 2 வாரத்தில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சியின் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

சென்னை விஐடியில் ஆடை வடிவமைப்பு போட்டிகள்

சென்னை விஐடியின் 15 -ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் சா்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக, கல்லூரிகளுக்கு இடையேயான ‘என்விஷன் 25’ என்ற ஆடை வடிவமைப்பு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.சென... மேலும் பார்க்க

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் ... மேலும் பார்க்க