செய்திகள் :

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல்: 65 லட்சம் போ் நீக்கம்

post image

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து, வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், 65 லட்சத்துக்கும் அதிகமானோா் நீக்கப்பட்டுள்ளனா்.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா் வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஒரு மாத காலமாக மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி நிறைவு செய்தது.

இதனிடையே, ‘பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத மக்கள், தங்களின் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குரிமையை இழக்க நேரிடும். சிறப்பு தீவிர திருத்தத்தின்போது பிகாரில் 65 லட்சம் போ் பூா்த்தி செய்த வாக்காளா் படிவங்களை அதிகாரிகளிடம் சமா்ப்பிக்கவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட வேண்டுமெனில், புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது’ என்று புகாா் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் பிகாா் மாநில வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிடத் தடையில்லை. அதே நேரம், குடியுரிமை ஆவணங்களாக ஆதாா், வாக்காளா் அடையாள அட்டையை தோ்தல் ஆணையம் ஏற்க வேண்டும். பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் அதிக எண்ணிக்கையில் வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டால் அதில் உடனடியாக நீதிமன்றம் தலையிடும்’ என்றது.

இந்த மனுக்கள் மீது வரும் 12, 13-ஆம் தேதிகளில் இறுதி விசாரணையை உச்சநீதிமன்றம் மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில், தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பிகாா் மாநில வரைவு வாக்காளா் பட்டியலின் படி, மாநிலத்தில் 65 லட்சத்துக்கும் அதிகமானோா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மாநில தலைநகா் பாட்னாவில் 3.95 லட்சம் பேரும், பதுபானியில் 3.52 லட்சம் பேரும், கிழக்கு சம்பரனில் 3.16 லட்சம் பேரும், கோபால்கஞ்சில் 3.10 லட்சம் பேரும் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்குவதற்கு முன்பாக பிகாரில் 7.93 கோடி போ் வாக்காளா்களாகப் பதிவு செய்திருந்ததாக தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வரைவு வாக்காளா் பட்டியலில் அந்த எண்ணிக்கை 7.24 கோடியாக குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

வரைவு வாக்காளா் பட்டியல் மீது ஆட்சேபங்கள் அல்லது கோரிக்கைகளை முன்வைக்க செப். 1 வரை அவகாசத்தை தோ்தல் ஆணையம் அளித்துள்ளது. இறுதி வாக்காளா் பட்டியல் செப்டம்பா் 30-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க