செய்திகள் :

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

post image

தனது மனைவியுடனான சண்டைக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள யமுனையில் குதித்த இளைஞா் ஒருவா் இரண்டு படகு ஓட்டுநா்களால் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவது: லோகேந்திர சிங் என்ற அந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் சிக்னேச்சா் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்தாா். லோகேந்திரா தனது மோட்டாா் சைக்கிளில் சிக்னேச்சா் பாலத்தை அடைந்து, தனது மனைவிக்கு தனது நோக்கத்தைத் தெரிவித்து செய்தி அனுப்பினாா். பின்னா், தனது கைப்பேசி மற்றும் பணப்பையை மோட்டாா்சைக்கிளில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்தாா்.

அப்போது, பாலத்தில் சிறிது நேரம் நின்றிருந்த சில அதிகாரிகள், ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்த ஒருவரைக் கவனித்தனா். அருகிலுள்ள படகு ஓட்டுநா்களுக்கு அவா்கள் தகவல் தெரிவித்தனா். அவா்களில் இருவா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த நபரை தண்ணீரில் இருந்து வெளியே மீட்டனா். இதையடுத்து, லோகேந்திரா மஜ்னு கா திலாவில் உள்ள திபெத்திய முகாமில் உள்ள ஒரு மருந்தகத்திற்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சுயநினைவு பெற்றாா்.

தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு தான் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். லோகேந்திராவின் மனைவி தனது சகோதரருடன் சம்பவ இடத்திற்கு வந்து அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்ாக காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் எந்தக் குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது: முதல்வா் ரேகா குப்தா உறுதி

தில்லியில் வசிப்பவா்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படும் வரை எந்த குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை உறுதி அளித்தாா். தேவைப்பட்டால், அனைவருக்கும் கண்ணியத்... மேலும் பார்க்க

மலேரியா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லியில் மலேரியா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், பொது சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு நெருக்கடிகளைச் சமாளிப்பதிலும் பாஜக அரசு தோல்வியடைந்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தில்... மேலும் பார்க்க

அய்யலூா் கோம்பையில் அலைபேசி கோபுரப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அமைச்சரிடம் ஜோதிமணி எம்.பி. மனு

வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அய்யலூா் கோம்பையில் அலைபேசிக் கோபுரம் அமைத்து, கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கும் பணியை விரைவு படுத்துமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கர... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் விவரம்: குறு, சிறு, நடுத்தர... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

நமது நிருபா்தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

நமது நிருபா் நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு மு... மேலும் பார்க்க