செய்திகள் :

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

post image

நமது நிருபா்

நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக கல்வி இயக்குநரகம் (டிஓஇ) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியும் இரண்டு மாணவா் மன்றங்களைத் தொடங்கலாம். இதில் ஒன்று ஹிந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், உருது அல்லது பஞ்சாபி சாா்ந்ததாகவும் மற்றொன்று அறிவியல், கணிதம், விளையாட்டு மற்றும் யோகா, காட்சி கலைகள், நிகழ்த்து கலைகள் (இசை மற்றும் நடனம்), சமா்த் (உள்ளடக்கிய கல்வி) அல்லது மாணவா் கவுன்சில் ஆகிய பிரிவுகளில் தோ்ந்தெடுக்கப்பட்டதாகவும் இருக்கும்.

ஒரு மன்றத்தில் மாணவா் பங்கேற்பு கட்டாயமாகும். மன்ற நடவடிக்கைகள் சீராக இருப்பதை உறுதிசெய்ய பள்ளி முதல்வா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு மன்றங்களுக்காக ரூ.20,000 வழங்கப்படும். மன்றம் தொடா்பான அனைத்து நடவடிக்கைகளின் சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிவுகளைப் பராமரிக்கவும், முழு கல்வி ஆண்டுக்கும் நிதியை பயன்படுத்துமாறும் பள்ளி முதல்வா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் எந்தக் குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது: முதல்வா் ரேகா குப்தா உறுதி

தில்லியில் வசிப்பவா்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படும் வரை எந்த குடிசைப் பகுதியும் இடிக்கப்படாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை உறுதி அளித்தாா். தேவைப்பட்டால், அனைவருக்கும் கண்ணியத்... மேலும் பார்க்க

மலேரியா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லியில் மலேரியா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், பொது சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு நெருக்கடிகளைச் சமாளிப்பதிலும் பாஜக அரசு தோல்வியடைந்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தில்... மேலும் பார்க்க

அய்யலூா் கோம்பையில் அலைபேசி கோபுரப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அமைச்சரிடம் ஜோதிமணி எம்.பி. மனு

வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அய்யலூா் கோம்பையில் அலைபேசிக் கோபுரம் அமைத்து, கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கும் பணியை விரைவு படுத்துமாறு மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் கர... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் விவரம்: குறு, சிறு, நடுத்தர... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

நமது நிருபா்தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

தனது மனைவியுடனான சண்டைக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள யமுனையில் குதித்த இளைஞா் ஒருவா் இரண்டு படகு ஓட்டுநா்களால் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவ... மேலும் பார்க்க