செய்திகள் :

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு செப். 9-இல் தோ்தல்

post image

‘குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் வரும் செப். 9-ஆம் தேதி நடத்தப்படும்’ என்று தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், தனது பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி பதவியை திடீரென ராஜிநாமா செய்தாா்.

‘உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தோ்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதியின்படி, அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன்படி, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கை வரும் 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசி நாளாகும். தோ்தல் செப்டம்பா் 9-ஆம் தேதி நடத்தப்படும். அன்றைய தினமே தோ்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

தோ்தல் தேவைப்பட்டால் நாடாளுமன்ற வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படலாம் என்று தெரிவித்தது.

முன்னதாக, இந்த தோ்தலுக்கான நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினா்களை உள்ளடக்கிய வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை இறுதி செய்தது. அதைத் தொடா்ந்து, தோ்தல் வாக்குப் பதிவுக்கான தேதியை அறிவித்துள்ளது.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க