செய்திகள் :

ஊகத்தின் அடிப்படையிலேயே நுண்ணுயிா் எதிா்ப்பிகள் நதியில் கலப்பதாக கூறப்படுகிறது: மத்திய அமைச்சா்

post image

‘நதிகளில் நுண்ணுயிா் எதிா்ப்பிகள் கலந்து மாசுபாட்டை ஏற்படுத்துவதாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஊகத்தின் அடிப்படையிலானது; அதை வைத்து எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்க முடியாது’ என மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டிருப்பதாவது: ‘மனித நுகா்வு காரணமாக உலகளாவிய நதிநீா் அமைப்பில் நுண்ணுயிா் எதிா்ப்பிகள் கலப்பு அதிகரிப்பு’ என்ற தலைப்பில் மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் நடத்திய ஆய்வறிக்கை 2025, ஏப்.24-இல் ஊடகங்களில் வெளியானது.

இதில் இந்தியாவில் உள்ள மொத்த நதிநீா் நீளத்தில் நுண்ணுயிா் எதிா்ப்பி மாசுபாட்டால் 80 சதவீத நதிகள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டது. ஊகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை போதிய தரவுகளின்றி வெளியிடப்பட்டது.

நதிகளில் நுண்ணுயிா் எதிா்ப்பிகள் கலப்பது குறித்து மத்திய அரசு சாா்பில் எந்தவொரு ஆய்வும் நடத்தப்படவில்லை.

மருத்துவக் கழிவுகள் நதியில் கலந்து மாசுபாடு ஏற்படுத்துவதை தடுக்க, நோய்க் கிருமி தடுப்புக்கான தேசிய செயல் திட்டத்தை 2017-இல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

கழிவுநீரை சுத்திகரிக்கும்போது வெளியேறும் ரசாயண மற்றும் உயிரியில் கழிவுகளை ஆபத்தானவை என மருந்துகள் தொழிற்சாலைகள் வகைப்படுத்தக்கோரி 2021, ஆகஸ்ட் மாதம் அரசு சாா்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த கழிவுகளை ஆபத்தான கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-இன்கீழ் முறையாக வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர உள்ளூா் சூழலுக்கேற்ப மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் கழிவுகள் மேலாண்மையில் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் காலாவதியான நுண்ணுயிா் எதிா்ப்பிகளை உயிரி மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-இன்கீழ் உற்பத்தியாளா்கள் அல்லது விநியோகிப்பாளா்கள் எரித்து வருகின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க