செய்திகள் :

பெரம்பலூரில் சாலைப் பணியாளா்கள் தா்னா

post image

துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் தீப்பந்தம் ஏந்தி செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் கோட்டத் தலைவா் பெ. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். கோட்ட துணைத் தலைவா்கள் பெ. மதியழகன், ப. சுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன் தொடக்க உரையாற்றினாா். சாலைப் பணியாளா் சங்கத்தின் கோட்டச் செயலா் சி. சுப்பிரமணியன் கோரிக்கை விளக்க உரையாற்றினாா்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் தீப்பந்தம் ஏந்தி முழக்கமிட்டனா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் நிறைவுறையாற்றினாா்.

இதில், வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் மு. பாரதிவளவன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் த. கருணாகரன் உள்பட சாலைப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா். முன்னதாக, மாநில செயற்குழு உறுப்பினா் தா. பழனிசாமி வரவேற்றாா். நிறைவாக, கோட்டப் பொருளாளா் க. மாா்க்கண்டன் நன்றி கூறினாா்.

பெரம்பலூா் அருகே போதைப் பொருள்கள் விற்றவா் கைது

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1.5 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில... மேலும் பார்க்க

டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்து விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்த விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூா் கிராமம் பெரியசாமி கோயில் பின்புறம் வசித்... மேலும் பார்க்க

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்! அமைச்சா் தொடங்கி வைத்தாா்

பெரம்பலூா் மாவட்டம், குன்னத்திலிருந்து சென்னைக்கு குளிா்சாதன வசதியுடன்கூடிய பேருந்து சேவையை, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். பெரம்பலூா் ம... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 2.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட சுமாா் 2.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா். மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில், அர... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியா் ச. அ... மேலும் பார்க்க

செங்குணத்தில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகே செங்குணம் கிராமத்திலுள்ள மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் கடந்த 13-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுதன்... மேலும் பார்க்க