செய்திகள் :

பாலியல் குற்றச்சாட்டு... மௌனம் கலைப்பாரா விஜய் சேதுபதி?

post image

நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே 50 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார்.

இதில், மகாராஜா திரைப்படம் அவரின் முதல் ரூ. 100 கோடி வசூலித்த திரைப்படமாகும். அண்மையில் வெளியான தலைவன் தலைவி திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்று, வணிக வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் ரம்யா மோகன் என்பவர் பதிவிட்ட பதிவொன்று பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அப்பதிவில், “கோலிவுட்டின் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கேஸ்டிங் கவுச் (casting couch) கலாசாரம் விளையாட்டானது அல்ல. எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் (ஊடக வெளிச்சம் கொண்டவர்) இந்த உலகத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டார். தற்போது, மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார். தொழில்துறை விதிமுறை என்கிற பெயரில் போதைப்பொருள், சூழ்ச்சி, பரிவர்த்தனை சுரண்டல்களே நடக்கின்றன. அப்பெண்ணுக்கு தன்னுடன் கேரவேனில் ஆசைக்கு இணங்க ரூ. 2 லட்சமும் பாலியல் விருப்பங்களுக்கு ரூ. 50 ஆயிரமும் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி, சமூக ஊடகங்களில் புனிதராக நடிக்கிறார். இவர் அப்பெண்ணைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தினார். இப்படித்தான் இங்கு பலருடைய கதையும் இருக்கிறது. ஆனால், சமூக வலைதளங்களில் ஆண்களைப் புனிதர்களாக வணங்குகின்றனர். போதைப்பொருளும் பாலியல் தொடர்பும் உண்மையானதுதான். விளையாட்டல!” எனப் பதிவிட்டுள்ளார்.

இப்பதிவு விஜய் சேதுபதி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்த, ஆதாரம் இல்லாமல் பதிவிடுவது வைரலாகத்தானே என ரம்யா மோகனைக் கேள்வி கேட்டனர்.

விஜய் சேதுபதி

அதற்கு ரம்யா, “சில உணர்ச்சியற்ற முட்டாள்கள் உண்மையை ஒப்புக்கொள்வதை விட, ஆதாரத்தைக் கேள்வி கேட்பதிலும் பாதிக்கப்பட்டவரைக் குறை கூறுவதிலும் அதிக கவனம் செலுத்துவது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நாள்குறிப்பையும் தொலைபேசி உரையாடல்களையும் பார்த்தபோது இந்த உண்மை அவர் குடும்பத்தைப் புயல்போல தாக்கியது. இது வெறும் கதை இல்லை. இது அவளுடைய வாழ்க்கை, அவளுடைய வலி...” எனத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இப்பதிவு வைரலாகி வருகிறது. ஆனால், ரம்யா மோகன் அப்பதிவை நீக்கிவிட்டார். அதேநேரம், பதிவைப் புகைப்படமாக எடுத்தவரின் பதிவில், “இந்தப் பதிவு இருக்கட்டும். அவர் (விஜய் சேதுபதி) மாட்டும்போது தேவைப்படும்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர்!

Actor Vijay Sethupathi faces serious casting couch allegations

கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது... மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா கிங்டம் படம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது எனக் கூறியுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி ... மேலும் பார்க்க

இந்திரா முதல் பாடல் ரிலீஸ் தேதி!

வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராமின் தரமணி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. பின்னர், ராக்கி, ஜெயிலர் படங்களில் நடித்து கவன... மேலும் பார்க்க

பாராட்டும் பட்டப் பெயரும்..! மாறிமாறி கொஞ்சிக் கொள்ளும் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா!

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகாவின் க்யூட்டான பதிவுகளும் செல்லமான பட்டப் பெயர்களும் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. கீதகோவிந்தம் படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை... மேலும் பார்க்க

சலம்பல... மதராஸி முதல் பாடலின் புரோமோ!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிடப்பட... மேலும் பார்க்க

மன உறுதிதான் திவ்யா தேஷ்முக் வெற்றிக்குக் காரணம்: சூசன் போல்கர்

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக் குறித்து அமெரிக்க- ஹங்கேரியன் லெஜெண்ட் சூசன் போல்கர் பாராட்டி பேசியுள்ளார். இந்தியாவின் இளம் போட்டியாளரான திவ்யா தேஷ்முக் (19) திங்கள்கிழமை ஃபிடே மகளிா்... மேலும் பார்க்க

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் ஆமிர் கான்! சித்தாரே ஜமின் பர் ஓடிடி வெளியீடு!

பாலிவுட் நடிகர் அமிர் கானின் “சித்தாரே ஜமீன் பர்” எனும் புதிய திரைப்படம், யூடியூபில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி... மேலும் பார்க்க