செய்திகள் :

மெட்ராஸ் : இது வெறும் நகரம் மட்டுமல்ல, நம்பிக்கை - சென்னை குறித்த அனுபவங்களை பகிருங்கள்!

post image

சென்னை இது வெறும் நகரம் அல்ல. பலரின் நம்பிக்கை. மனித சரித்திரத்தில் மகத்தான நிகழ்வு என்பது மனிதர்களின் புலம் பெயர்வுதான் புலம் பெயர்தலால் நாகரிகம் பெற்றோம். புலம் பெயர்தலால் வளர்ச்சி அடைந்தோம். புலம் பெயர்தலால் வாய்ப்புகளை பெற்றோம். .ஆனால் சென்னைகான வருகை என்பது வெறும் புலம் பெயர்தல் மட்டும் அல்ல. அது நேர்மறை உணர்வு.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையை நோக்கி படை எடுக்கிறார்கள். சென்னை சென்றால் பிழைத்து கொள்ளலாம். சென்னை சென்றால் வெற்றியை ஈட்டிவிடலாம். சென்னை சென்றால் பூர்வீக ஊரில் அடமானத்தில் இருக்கும் வீட்டை மீட்டுவிடலாம். சென்னை சென்றால்.. சென்றால் சென்றால்.. சென்னை சென்றால் என கனவுகள் முடிவிலியாக நீள்கிறது.

சென்னை
சென்னை

நவீன சென்னையின் வரலாறு மதராசபட்டிணம் கிராமத்தை 1639 இல் கிழக்கிந்திய கம்பெனி விலைக்கு வாங்கியதில் இருந்து தொடங்குகிறது. ஆனால், சென்னையின் வரலாறு என்பது அதற்கும் முந்தையது. சென்னைக்கு மிக அருகில் என கணக்கிட்டால் ஆதி மனிதன் வாழ்ந்த கூடியம் குகை வரை நீங்கள் கணக்கில் எடுத்து கொள்ளலாம்.

சென்னை மட்டும்தான் தமிழ்நாடா?

நிச்சயம் இல்லை தான். மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி என தமிழ் நிலமே தொன்மையானது. அடர்த்தியான வரலாற்றால் பின்னப்பட்டது தான். மறுப்பதற்கு இல்லை.

வளர்ச்சியை பரவலாக்க வேண்டும்தான். வாய்ப்புகளை எல்லா நகரங்களிலும் ஏற்படுத்தி தர வேண்டும்தான். இதவும் மறுப்பதற்கில்லைதான். ஆனால், சென்னை தரும் அண்மைய உணர்வு அலாதியானது.

அப்படியான சென்னையை கொண்டாடுவோம்.

சென்னை குறித்த உங்கள் உணர்வை, சென்னையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை, சென்னை குறித்த உங்கள் கனவை சுவைப்பட எழுதுங்கள்.

சிறந்த கட்டுரைகள் விகடன் தளத்தில் பிரசுரிக்கப்படும். அதி சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகளும் உண்டு.

கட்டுரை அனுப்ப கடைசி நாள் : ஆக்ஸ்ட் 30, 2025

விகடனும் நானும் !

விகடன் இதழுடன் உங்களுக்கு இருக்கும் பந்தம் குறித்து எழுத ஓர் அரிய வாய்ப்பு!ஏறக்குறைய 100 ஆண்டுகளாக, தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு நீங்காத அங்கமாக விகடன் திகழ்ந்து வருகிறது. பொழுதுபோக்கு, அரசியல், சமூகச்... மேலும் பார்க்க

பறம்பின் குதிரை படை தளபதி இரவாதன் தான் என் ஃபேவரட்! | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இன்னாருக்கு இன்னாரென்று! - அவளின் அழகிய கள்ளத்தனம் | ஆஹா கல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பறம்பு நோக்கி ஒரு பயணம்! | மனம் கவர்ந்த வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வீரம், அறம், காதல்... வேள்பாரியில் உங்களைக் கவர்ந்த விஷயம்! - உலகுக்கு சொல்லுங்கள் | My Vikatan

ஆனந்த விகடனில் சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களுடன் 'வீரயுக நாயகன் வேள்பாரி' தொடராக வந்தபோது லட்சக்கணக்கான வாசகர்கள் பிரமிப்பு குறையாத மனதுடன் அதை வாசித்தார்கள். தமிழ் மக்களின் கருணை, ... மேலும் பார்க்க

தங்க வளையல்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க