எழுத்தாளா்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தி கலாப்ரியா: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்...
சேலம்: வவ்வால்களை வேட்டையாடி, சில்லி சிக்கன் என விற்பனை; இருவர் கைது; விசாரணையில் பகீர் தகவல்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள டேனிஷ்பேட்டை வனத்திற்கு உட்பட்ட தொப்பூர் ராமசாமி மலைப்பகுதியில் அடிக்கடி துப்பாக்கிச் சூடும் சத்தம் கேட்பதாக டேனிஷ்பேட்டை வன அலுவலகத்திற்குத் தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் வனச்சரகர் விமல்குமார் தலைமையிலான வனக் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வனத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக, அங்குச் சென்ற அதிகாரிகள், வேட்டையில் ஈடுபட்ட 2 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வவ்வால் வேட்டையில் ஈடுபட்டது டேனிஸ்பேட்டையைச் சேர்ந்த கமல் மற்றும் செல்வம் என்பதும், இவர்கள் பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, சுத்தம் செய்து சமைத்து, மாலை நேரச் சிற்றுண்டியாக சில்லி சிக்கன் எனப் பொதுமக்களுக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படித்தி சிறையில் அடைத்தனர்.

குறிப்பாக, இவர்கள் வேட்டையாடிய பழந்தின்னி வவ்வால்கள் தனித்துவமானவை. பழங்களையும், பூக்களிலிருந்து தேனையும், சிறிய பூச்சிகளை மட்டுமே உணவாக அருந்தக்கூடிய வவ்வால்கள் இவை. இந்த வகை வவ்வால்கள் மனிதர்கள் உணவாகச் சாப்பிடக் கூடாத உயிர்களில் ஒன்றாகும்.
ஏற்கனவே, நிபா வைரஸ், கொரோனா வைரஸ் உள்ளிட்டவை வவ்வால்கள் மூலம் பரவியதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், வவ்வால்களைப் பிடித்து சில்லி சிக்கன் எனக் கூறி பொதுமக்களுக்கு விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.