செய்திகள் :

Telangana: விபத்தில் உயிரிழந்த மகள்; வரதட்சணையை திரும்ப கேட்டு உறவினர்கள் போராட்டம்

post image

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் ராமகிருஷ்ணப்பூர் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த லாவண்யா (29) என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுரேஷ் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்தின்போது லாவண்யாவின் பெற்றோர் ரூ.50 லட்சம் ரொக்கமும், 25 சவரன் நகையும் வரதட்சணையாகக் கொடுத்ததாகத் தெரிகிறது. இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக லாவண்யா கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாசித்து வந்தார்.

இதற்கிடையே கடந்த 16-ம் தேதி தந்தையுடன் பைக்கில் செல்லும் பொழுது ஏற்பட்ட விபத்தில் லாவண்யா படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி சிகிச்சை பலனின்றி லாவண்யா மருத்துவமனையிலேயே இறந்தார்.

வரதட்சணை

பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் லாவண்யாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலை ஆம்புலன்ஸ் மூலமாக லாவண்யாவின் கணவர் சுரேஷ் வீட்டுக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.

'திருமணத்தின் போது கொடுத்த வரதட்சணையை திரும்ப கொடுத்தால்தான் சடலத்தை எடுத்துச் செல்வோம்' எனக் கூறி லாவண்யாவின் தாயார் உறவினர்களுடன் போராட்டம் நடத்தினார். இரண்டு நாள்களாக போராட்டம் தொடர்ந்த நிலையில், காவல்துறையினர் லாவண்யாவின் குடும்பத்தினரையும், அவரின் தாயாரையும் சமாதானம் படுத்தி இறுதிச் சடங்குகளை செய்ய கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`என் அக்காவுடன் பழகியது பிடிக்காததால் கொலை செய்தேன்’ - நெல்லை ஐ.டி ஊழியர் கொலை பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார். 28 வயது இளைஞரான அவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் நோயால் அவத... மேலும் பார்க்க

போலி தூதரக ஜெயின் தில்லு முல்லு அம்பலம்: 162 வெளிநாட்டு பயணம், ரூ.300 கோடி மோசடி, 25 போலி கம்பெனி..

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கடந்த வாரம் வெஸ்ட்ஆர்டிகா நாட்டின் பெயரில் போலி தூதரகம் நடத்தியது தொடர்பாக ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 4 கார்கள், போலி வெஸ்ட்ஆர்ட... மேலும் பார்க்க

Sister Hong: 1600 -க்கும் மேற்பட்ட ஆண்கள்; பாலியல் வீடியோவை விற்ற நபர் கைது - தொடரும் சிக்கல்

சீனாவின் சமூக ஊடகங்களில் மட்டுமல்லாமல் மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது 'சிஸ்டர் ஹாங்' விவகாரம். இந்த விவகாரம் வெளியானதிலிருந்து விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.சிஸ்... மேலும் பார்க்க

தேனியில் மணல் திருட்டு விவகாரம் - புகார் கொடுக்கும் உரிமை யாருக்கு? - குழப்பத்தில் அதிகாரிகள்

தேனி கொடுவிலார்பட்டி பாண்டியராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சட்டவிரோதமாக மணல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் தேனி தாசில்தார் சதீஷ்குமார் ... மேலும் பார்க்க

பீகார்: ஊர்க்காவல் படை தேர்வில் மயக்கமடைந்த பெண்; ஆம்புலன்ஸில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள போதிகயா என்ற இடத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் உடற்பயிற்சி தேர்வு நடத்தப்பட்டத... மேலும் பார்க்க

கோவை: `திருமணம் தாண்டிய உறவுக்கு தடை' - 4 வயது மகளை கொலை செய்த பெண் கைது

கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (30). இவர் கட்டுமானப் பணியில் சித்தாளாக பணியாற்றி வருகிறார். தமிழரசிக்கும், ரகுபதி (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த ... மேலும் பார்க்க