செய்திகள் :

3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

post image

மும்பை: இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் எதிர்மறையாகத் தொடங்கி நிஃப்டி 156.10 புள்ளிகளும், சென்செக்ஸ் 572.07 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தன. ஜூன் 13 க்குப் பிறகு முதல் முறையாக நிஃப்டி 24,700 புள்ளிகளுக்குக் கீழே சரிந்தது குறிப்பிடத்தக்கது.

கோடக் மஹிந்திரா வங்கியில் ஏற்பட்ட கடும் விற்பனை மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நிச்சயமற்ற தன்மை காரணமாக, இன்றைய பங்குச் சந்தைகள் மூன்றாவது நாளாக சரிந்தன.

முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவிகிதம் சரிந்த நிலையில், பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.7 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.3 சதவிகிதம் சரிந்து நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 686.65 புள்ளிகள் சரிந்து 80,776.44 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 572.07 புள்ளிகள் சரிந்து 80,891.02 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 156.10 புள்ளிகள் சரிந்து 24,680.90 ஆக நிலைபெற்றது.

ஜூன் காலாண்டில் கோடக் மஹிந்திரா நிறுவனம் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,472 கோடியாக இருந்ததாகவும், பாதகமான பொருளாதார நிலைமைகள் காரணமாக சில்லறை வணிக வாகன பிரிவில் அழுத்தம் ஏற்படுத்தியதாக தெரிவித்ததையடுத்து அதன் பங்குகள் 7.31 சதவிகிதம் சரிந்தன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வங்கியின் லாபம் ரூ.7,448 கோடியாக இருந்தது, ஆனால் பொது காப்பீட்டுப் பிரிவில் அதன் பங்கு விற்பனையில் ரூ.3,000 கோடிக்கும் அதிகமான லாபம் ஈட்டப்பட்டது. அதே வேளையில் மார்ச் காலாண்டில் நிகர லாபம் ரூ.4,933 கோடியாக இருந்தது.

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், டைட்டன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல் டெக் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய பங்குகள் சரிந்த நிலையில் இந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிசி ஆகியவை உயர்ந்து முடிந்தன.

நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சிப்லா, ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்யுஎல், எஸ்பிஐ லைஃப் ஆகியவை உயர்ந்த நிலையில் கோடக் மஹிந்திரா வங்கி, விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

பார்மா தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்த நிலையில், ரியாலிட்டி குறியீடு 4 சதவிகிதமும், மீடியா குறியீடு கிட்டத்தட்ட 3 சதவிகிதமும், மூலதன பொருட்கள், உலோகம், தொலைத்தொடர்பு, பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி குறியீடுகள் ஆகியவை 1 முதல் 1.5 சதவிகிதம் வரை சரிந்தன.

ஆம்பர் எண்டர்பிரைசஸ் இஸ்ரேலின் யூனிட்ரானிக்ஸ் நிறுவனத்தை ரூ.404 கோடிக்கு வாங்கியதால் அதன் பங்குகள் கிட்டத்தட்ட 3% உயர்ந்த நிலையில், காலாண்டு லாபம் குறைந்ததால் சிடிஎஸ்எல் பங்குகள் 6% சரிந்தன.

வலுவான காலாண்டு முடிவுகளால் லாரஸ் லேப்ஸ் பங்குகள் 6% உயர்ந்தும், காலாண்டு வருவாய் குறைந்ததால் கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் 7% சரிந்தன.

வலுவான காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு ஆதார் ஹவுசிங் பங்குகள் சாதனை உச்சத்தை எட்டியது.

டிசிஎஸ் அதன் பணியாளர்களில் 2 சதவிகிதத்தை குறைக்க போவதாக அறிவித்ததையடுத்து அதன் பங்குகள் கிட்டத்தட்ட 2 சதவிகிதம் சரிந்தது.

லாரஸ் லேப்ஸ், ஆதார் ஹவுசிங், குளோபல் ஹெல்த், நுவோகோ விஸ்டாஸ், யுபிஎல், டோரண்ட் பார்மா, ஃபோர்டிஸ் ஹெல்த், ஷியாம் மெட்டாலிக்ஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் எட்டியது.

இந்தியாவில் மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை 10.7% உயர்வு!

மும்பை: நாடு முழுவதும் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் ஆண்டுக்கு ஆண்டு 10.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதை அளவிடும் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் இன்டெக்ஸ் க... மேலும் பார்க்க

12,000 ஊழியர்கள் பணிநீக்கம்: டிசிஎஸ்

புதுதில்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்ததைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.வேலைவாய்ப... மேலும் பார்க்க

குறைந்த விலையில் நிறைவான அம்சங்கள் கொண்ட ரெட்மி நோட் 14 எஸ்இ!

ரெட்மி நிறுவனத்தின் நோட் 14 எஸ்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகமான ரெட்மி நோட் 14 5ஜி, ரெட்மி நோட் ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் ப்ரோ பிளஸ் 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் உள்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் குறைந்து ரூ.86.67ஆக நிறைவு!

மும்பை: டாலர் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் குறைந்து ரூ.86.67 ஆக முடிந்தது.ஆகஸ்ட் 1 காலக்கெடுவிற்கு முன்னதாக, இந்த... மேலும் பார்க்க

அதிக பேட்டரி! ... ஓப்போ ரெனோ 14 வரிசையில் புது ஸ்மார்ட்போன்!

ஓப்போ ரெனோ 14 வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. ஓப்போ ரெனோ 14 எஃப் என்ற புதிய ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதை விட கூடுதல் அம்சங்களுடன்... மேலும் பார்க்க

5 போயிங் 737 விமானங்களை குத்தகைக்கு எடுக்கும் ஸ்பைஸ்ஜெட்!

புதுதில்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஐந்து போயிங் 737 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் விமானங்களை இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக த... மேலும் பார்க்க