செய்திகள் :

ராஜஸ்தான் பள்ளியில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து சிறுவன் பலி!

post image

ராஜஸ்தானில் உள்ள அரசுப் பள்ளியின் வாயிலில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் ஆறு வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜலாவரில் அரசுப் பள்ளி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஏழு பேர் கொல்லப்பட்ட மூன்று நாள்களில், ராம்கர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 6 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

பள்ளியை விட்டு வெளியேறும்போது கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் 6 வயது சிறுவன் உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவன் அர்பாஸ் கான் என அடையாளம் காணப்பட்டது. மேலும் காயமடைந்த ஆசிரியர் அசோக் குமார் சோனி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து சிறுவனின் உடலுடன் பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குடும்ப உறுப்பினர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஜெய்சால்மரில் பள்ளி வாயில் இடிந்து விழுந்ததில் அப்பாவி சிறுவன் இறந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.

இந்த மழைக் காலத்தில் இதுபோன்ற சம்பவங்களில் வேறு எந்த மாணவரும் உயிரிழக்காமல் தவிர்க்க முதல்வர் பஜன்லால் சர்மா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறினார்,

ஜலாவர் துயரத்திற்குப் பிறகு, மேலும் ஒரு மாணவர் இறந்தது மாநில அரசுக்குக் கவலை அளிக்கும் விஷயமாக இருக்க வேண்டும் என்று அவர் பதிவில் கூறினார்.

A concrete slab holding up the main gate of a government school in Rajasthan's Jaisalmer district collapsed on Monday, instantly killing a six-year-old who was leaving school at the time and injuring a teacher, police said.

ஆபரேஷன் மகாதேவ்: பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் கொலை

பஹல்காம் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹாஸிம் மூஸா ஃபெளஜி, ஆபரேஷன் மகாதேவ் பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியி... மேலும் பார்க்க

கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பேசாத ராஜ்நாத் சிங்: சு.வெங்கடேசன்

ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றிய கர்னல் சோஃபியாவுக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். பஹ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தோண்டத்தோண்ட கிடைக்கும் ஆயுதங்கள்! பாதுகாப்புப்படை தீவிர சோதனை

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சூரசந்த்பூர், கேங்க்போக்பி, பேர்ஸ்வால், டெங்க்நௌபால், சண்டெல் ஆகிய மலைப்பிரதேச மாவட்டங்களில் கடந்த சில ந... மேலும் பார்க்க

ஐபிஎல் கூட்ட நெரிசல்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு காவல் ஆணையருக்கு மீண்டும் பணி! கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையரை பணியிடைநீக்கம் செய்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக கர்நாடக அரசு திங்கள்கிழமை(ஜூலை 28) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக சாம்பியன் ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தலையீடு இல்லை என திட்டவட்டமாக மறுக்கவில்லை: பிரியங்கா

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகக் கூறவில்லை என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கால இ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை - ஜெய்சங்கர்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு... மேலும் பார்க்க