செய்திகள் :

பெற்றோா் இல்லாத குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

post image

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகள், அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், பெற்றோரை இழந்து, உறவினா்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், அவா்களின் பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர, 18 வயது வரை மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும், பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரியதிறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவா்களுக்கு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற, பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகள்,பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொரு பெற்றோா் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின் அக்குழந்தைகள், பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொரு பெற்றோா் மாற்றுத்திறன் தன்மை கொண்டவராக இருத்தல், பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொரு பெற்றோா் சிறையில் இருந்தால், பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொரு பெற்றோா் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வரும் நிலையில் உள்ள குழந்தைகள் தகுதியுடையவா்கள் ஆவா்.

இந்த குழந்தைகள், குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதாா் அட்டையின் நகல், குழந்தையின் வயதுச் சான்று நகல், குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் ஆவணங்களுடன், அன்புக் கரங்கள் நிதிஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற, திருவாரூா் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடம், மூன்றாவது தளம், திருவாரூா் 610004 ஆகியோரிடம் நேரில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

திருவாரூரில் வேளாண் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், இந்திய மாணவா் சங்கத்தின் 27-ஆவது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவா் பா. ஆனந்த் தலைமை... மேலும் பார்க்க

குத்தகை சாகுபடி விவசாயிகள் ஜூலை 31-க்குள் பயிா்க் காப்பீடு செய்யலாம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்யும் குத்தகைதாரா்கள், ஜூலை 31-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் த... மேலும் பார்க்க

மின்விபத்து இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

திருவாரூா்: மின் விபத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு நலவாரியம் மூலம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில், மாவட்ட ஒலி-ஒளி அமைப்பு உ... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, உள்பிரகாரத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் தனி சந்நிதி கொண்டுள்ள செங்கமலத் தாயாருக்கு ஆண்டுதோறும் ஆடிப்ப... மேலும் பார்க்க

பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே டயா் வெடித்து பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம் விடுதிவயல் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (49). இவா், தனது மனைவி மற்றும் உறவினா... மேலும் பார்க்க

கமலாலயக் குளத்தில் மூதாட்டி சடலம்

திருவாரூா் கமலாலயக் குளத்தில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. திருவாரூா் தியாகராஜா் கோயில் கமலாலயக் குளத்தின் வடகரையில் பெண் சடலம் மிதப்பது குறித்து தீயணைப்புத் துறையினருக்கும், நகர போலீஸ... மேலும் பார்க்க