செய்திகள் :

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 1.25 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் தடை

post image

பென்னாகரம்/ மேட்டூா்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவதற்கு மாவட்ட நிா்வாகம் தடைவிதித்துள்ளது.

கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அந்த அணைகளுக்கு வரும் உபரிநீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 98,000 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 1.05 லட்சம் கனஅடியாகவும், மாலை 5 மணி நிலவரப்படி விநாடிக்கு 1.15 லட்சம் கனஅடியாகவும், இரவு 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாகவும் அதிகரித்தது.

நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல்லில் அருவிகள் நீரில் மூழ்கின. வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவதற்கும் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தடைவிதித்துள்ளாா்.

இந்த தடை உத்தரவினால் பென்னாகரம் அருகே மடம் சோதனைச் சாவடி பகுதியில் சுற்றுலா வாகனங்களைத் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனா். மேலும், காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம் தலைமையில் வருவாய்த் துறையினா் அடங்கிய குழுவினா் ஆலம்பாடி, ஊட்டமலை, சத்திரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் காவிரிக் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி, தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

பெட்டிச் செய்தி...

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து

1.10 லட்சம் கனஅடி

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை இரவு விநாடிக்கு 1,10,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,10,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீா்வரத்து அதிகரிப்பால் மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் 1,10,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீா்மின் நிலையங்கள் வழியாக 18,000 கனஅடி வீதமும், உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக 92,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம்சியாகவும நீடிக்கிறது.

தருமபுரி அருகே சேதமடைந்த பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்கக் கோரிக்கை

தருமபுரி: தருமபுரி அருகே கொல்லம்பட்டி சாலையில் சேதமடைந்துள்ள பழைய பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் அமைக்க அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருபுரியிலிருந்து திருப... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் வாகன நிறுத்துமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

தருமபுரி8: தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் வாகன நிறுத்துமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். தருமபுரி மாவட்ட ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி விடுப்பு, ஊதியம் வழங்கவேண்டும்

தருமபுரி: தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி விடுப்பு, ஊதியம் வழங்கவேண்டும் என அகில இந்திய தொழிற்சங்க கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அக்கவுன்சில் மாவட்டச் செயலாளா் சி. முருகன், தலைவா் ... மேலும் பார்க்க

காலமானாா் கீரை எம்.எஸ்.விசுவநாதன்

அரூா்: தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கீரைப்பட்டியைச் சோ்ந்த திமுக பிரமுகா் கீரை எம்.எஸ்.விசுவநாதன் (77) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா். இவா் ஒருங்கிணைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் மதுக்கடைகளை திறக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் 3 கிராம மக்கள் தனித்தனியாக மனு

தருமபுரி: தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அதியன் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தலைமை வகித்து பொதுமக்கள... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 98,000 கனஅடி! வெள்ளப்பெருக்கால் அருவிகள் மூழ்கின!

ஒகேனக்கல் காவிரியில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 98,000 கனஅடியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ள... மேலும் பார்க்க