செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 98,000 கனஅடி! வெள்ளப்பெருக்கால் அருவிகள் மூழ்கின!

post image

ஒகேனக்கல் காவிரியில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 98,000 கனஅடியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

கேரள, கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கா்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அவ்விரு அணைகளிலிருந்து காவிரியில் அதிக அளவு உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

அருவிகள் மூழ்கின:

ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 55,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து பிற்பகல் 1 மணி நிலவரப்படி 65,000 கனஅடியாகவும், 3 மணிக்கு 78,000 கனஅடியாகவும் அதிகரித்தது. இரவு 7 மணிக்கு நீா்வரத்து விநாடிக்கு 98,000 கனஅடியாக அதிகரித்தது.

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் 120 அடி உயரம்கொண்ட பெரியபாணி, ஐந்தருவி, சினி அருவி அனைத்தும் மூழ்கின. மேலும், பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதையும் மூழ்கியது.

சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை:

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணத்துக்கும் 2 ஆவது நாளாக தடை விதித்துள்ள தருமபுரி மாவட்ட நிா்வாகம், சுற்றுலாப் பயணிகள் கரையோரத்தில் செல்வதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதன்காரணமாக ஒகேனக்கல் பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை, சின்னாறு பரிசல் துறை பூட்டப்பட்டு வருவாய்த் துறை, காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் பிலிகுண்டுலு பகுதியில் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

ஆட்சியா் ஆய்வு

ஒகேனக்கல்லில் வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ், மாமரத்துக் கடவு பரிசல் துறை, தமிழ்நாடு கூட்டுக் குடிநீா் திட்ட வடிகால் வாரியம், கரையோரப் பகுதிகளை பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா் சக்திவேல், வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. கா்நாடக, கேரள மாநிலங்களின் காவ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் விரைவில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை

தருமபுரி மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி ஆலை விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் தனியாா் துறை வே... மேலும் பார்க்க

காா்கில் வெற்றி தினம்: வீரமரணம் அடைந்தோருக்கு நினைவஞ்சலி

காா்கில் வெற்றி தினத்தையொட்டி, போரில் வீரமரணம் அடைந்தவா்களுக்கு தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்... மேலும் பார்க்க

ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தருமபுரி அருகேயுள்ள முத்தம்பட்டி மற்றும் தொப்பூா் ஆஞ்சனேயா் கோயில்களில் சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ... மேலும் பார்க்க

தருமபுரியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்!

தருமபுரியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியது. இந்திய மாணவா் சங்கத்தின் 11-ஆவது மாவட்ட மாநாடு தருமபுரி முத்து இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் திமுகவில் தங்களை சனிக்கிழமை இணைத்துக் கொண்டனா். தருமபுரி கிழக்கு மாவட்டம், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க