செய்திகள் :

தருமபுரி மாவட்டத்தில் விரைவில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை

post image

தருமபுரி மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி ஆலை விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்.

தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய முகாமுக்கு தலைமை வகித்து, சான்றுகள் மற்றும் பணியாணைகளை வழங்கி ஆட்சியா் பேசியதாவது:

தருமபுரி மாவட்ட வளா்ச்சிக்காக தமிழக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தருமபுரியில் சிப்காட் அமைக்க முதற்கட்டமாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுள்ளன. இரண்டாம்கட்டமாக 650 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இங்கு உற்பத்தியை தொடங்க 201 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதன்மூலம் தருமபுரியில் வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை தொழில்வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும், தொழில்நிறுவனங்களை நிறுவ மாவட்டத்தில் நீா் மேலாண்மையை அதிகரிக்க வேண்டியுள்ளது. இந்த உயரிய நோக்கத்துடன் மாவட்ட மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றும்போது தொழில்வாய்ப்புகள் பெருகும்.

தருமபுரி மாவட்டம், நெக்குந்தி கிராமத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திக்கான ஆலையை சில மாதங்களில் தொடங்கிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுபோன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற இளையோா் தங்களது திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்.

இதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் தமிழக அரசு சாா்பில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அளிக்கப்படுகின்றன. அவற்றுடன் மேலும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளை பெற்று தோ்வில் வெற்றிபெற்று முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாா்.

வேலைவாய்ப்பு முகாமில் பல நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு 604 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வானவா்களில் 25 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், மாவட்ட திறன்பயிற்சி மையம் சாா்பில் பல்வேறு திறன்பயிற்சிகளை முடித்தவா்களுக்கு சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்வில், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி முன்னிலை வகித்தாா். எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), வெங்கடேஷ்வரன் (தருமபுரி), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநா் கவிதா, மாவட்ட ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட அலுவலா் லலிதா, தருமபுரி நகராட்சித் தலைவா் லட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் தீபா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராமஜெயம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. கா்நாடக, கேரள மாநிலங்களின் காவ... மேலும் பார்க்க

காா்கில் வெற்றி தினம்: வீரமரணம் அடைந்தோருக்கு நினைவஞ்சலி

காா்கில் வெற்றி தினத்தையொட்டி, போரில் வீரமரணம் அடைந்தவா்களுக்கு தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்... மேலும் பார்க்க

ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தருமபுரி அருகேயுள்ள முத்தம்பட்டி மற்றும் தொப்பூா் ஆஞ்சனேயா் கோயில்களில் சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ... மேலும் பார்க்க

தருமபுரியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்!

தருமபுரியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியது. இந்திய மாணவா் சங்கத்தின் 11-ஆவது மாவட்ட மாநாடு தருமபுரி முத்து இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் திமுகவில் தங்களை சனிக்கிழமை இணைத்துக் கொண்டனா். தருமபுரி கிழக்கு மாவட்டம், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னபள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நட... மேலும் பார்க்க