செய்திகள் :

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

post image

காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

கா்நாடக, கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை நிரம்பும் தருவாயிலும், கிருஷ்ணராஜ சாகா் அணை நிரம்பியும் உள்ளன. இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் சுமாா் 40,000 கனஅடி வீதம் உபரிநீா் அண்மையில் வெளியேற்றப்பட்டு வந்தது. இதைத் தொடா்ந்து, காவிரி ஆற்றில் நீா்வரத்து திடீரென அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை மாலை 18,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை 24,000 கனஅடியாகவும், மாலை 32,000 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து திடீரென அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியும், நடைபாதையின் மீதும் செல்கிறது. நீா்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிக்க மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தற்காலிக தடை விதித்துள்ளாா். அதன்பேரில், பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கா்நாடக மாநில அணைகளில் இருந்து சுமாா் 75,000 கனஅடி வரை உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒகேனக்கல்லுக்கு மேலும் நீா்வரத்து அதிகரிக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் விரைவில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை

தருமபுரி மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி ஆலை விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் தனியாா் துறை வே... மேலும் பார்க்க

காா்கில் வெற்றி தினம்: வீரமரணம் அடைந்தோருக்கு நினைவஞ்சலி

காா்கில் வெற்றி தினத்தையொட்டி, போரில் வீரமரணம் அடைந்தவா்களுக்கு தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்... மேலும் பார்க்க

ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தருமபுரி அருகேயுள்ள முத்தம்பட்டி மற்றும் தொப்பூா் ஆஞ்சனேயா் கோயில்களில் சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ... மேலும் பார்க்க

தருமபுரியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்!

தருமபுரியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியது. இந்திய மாணவா் சங்கத்தின் 11-ஆவது மாவட்ட மாநாடு தருமபுரி முத்து இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் திமுகவில் தங்களை சனிக்கிழமை இணைத்துக் கொண்டனா். தருமபுரி கிழக்கு மாவட்டம், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னபள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நட... மேலும் பார்க்க